tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை '

தருமபுரி, மே 9- செங்கோடப்பட்டி கிராமத்தில் 3 யானைகளின் நடமாட் டம் உள்ளதால், பொதுமக்கள் வெளியே நடமாட வேண் டாம், என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த எருதுகூட அள்ளி, கனவனஅள்ளி காப்புக்காடு பகுதியிலிருந்து 3 யானைகள், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஊருக் குள் புகுந்து, விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப் படுத்தி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர் வியாழனன்று மாலை எருதுகூடஅள்ளி பகுதிக்கு சென்று யானை நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது 3 யானை கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றி திரிந் தது. இதையடுத்து பட்டாசு வெடித்து யானைகள் காப்புக்  காட்டிற்குள் விரப்பட்டது. மேலும், அப்பகுதியில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர், காட் டிற்குள் விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் எருதுகூட அள்ளி, கனவஅள்ளி, செங்கோடபட்டி உள்ளிட்ட கிராமங்க ளுக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேரங்களில் பொது மக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம். யானைகள் நட மாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

தனியார் பள்ளி பேருந்துகளில் ஆய்வு

நாமக்கல், மே 9- திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத் திற்குட்பட்ட 30 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 410 பள்ளி வாக னங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்திற்குட்பட்ட 30 பள்ளிகளைச் சேர்ந்த 410 வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் வெள்ளியன்று சோதனை செய்யப்பட்டது. வருவாய் கோட் டாட்சியர் சுகந்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோக னப்பிரியா, தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் சரவணன் மற்றும் பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த அலுவ லர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், வாகனங் களில் உரிய பாதுகாப்புகள் உள்ளதா? ஏறி இறங்கும் வழி சரியாக உள்ளதா? அவசர கால வழிகள் சரியாக உள்ளதா? உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கண் சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாக னங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்து தகுதிச்சான்றை பெற்றால் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி வழங்கப்படும், என வட்டார போக்குவ ரத்து அலுவலர் மோகனப்பிரியா தெரிவித்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

ஈரோடு, மே 9- உத்தரவினை செயல்படுத்தாத சிவகிரி பேரூராட்சி செயல்  அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்டது விஐபி நகர். இப்பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நான்கடி உயரத்திற்கு மண்ணை கொட்டி பேவர் பிளாக் கல் பதித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு சங்கர் என்பவர் புகார் மனு அளித்திருந்தார். அதன்படி ஆக்கிரமிப்பை அகற்றிட உத்தரவு பிறப்பித்து 5 மாதங்களாகிறது. அதன் நகல்கள் புகார்தாரருக்கு கிடைக்கப் பெற்றது. ஆயினும் உத்தரவினை செயல் அலுவலர் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டியுள் ளார். இந்நிலையில், உத்தரவினை செயல்படுத்தாத செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிர மிப்பை அகற்றிட ஆவண செய்ய வேண்டுமாறு சங்கர் என்ப வர் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

தருமபுரி, மே 9- பென்னாகரம் அருகே உள்ள மாக்க னூர் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப் பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், ஒஜிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மாக்க னூர் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஊராட்சி யின் அருகிலுள்ள ஏரியில் குழாய் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் எப்போ தாவது ஒருமுறை வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மூலம் ஒகேனக்கல் குடிநீரும், ஊராட்சியில் உள்ள  குடிநீரும் கலந்து விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. மக்களின் தேவைக் காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படுகிறது. அந்த தண்ணீரும் ஒரு குடும்பத்திற்கு தேவையான அளவு கிடைப்பதில்லை. தண்ணீர் பற்றாக்குறை யினால் இங்குள்ள மக்கள் விவசாய கிணறு களை தேடி செல்ல வேண்டிய நிலை உள் ளது. எனவே, ஒகேனக்கல் குடிநீர் தனியாக வும், ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் தனியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பற்றாக் குறையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.