கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருத்துவர்கள்
சேலம், மே 15- நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், என வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ரிவ்யூ மீட்டிங் நடத்த வேண் டும். ஆனால் கடந்த 2017 ஆண்டுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கடந்தும், தற் போது வரை கூட்டம் நடத்தவில்லை. இதனால் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணப்பயன் உள்ளிட்டவை கிடைக்காமல் உள்ளது. அதேபோல் மருத்துவமனையில் 950 மருத்துவர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியிடங்கள் என்பது உரு வாக்கப்படவில்லை. மருத்துவம னைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளி களின் எண்ணிக்கை கேற்ப புதிதாக பணியிடங்கள் உருவாக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பணப் பயன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தி னர் வியாழனன்று தமிழ்நாடு முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் செந்தில், நிர்வாகி பாபு உட்பட 600க்கும் மேற்பட்ட மருத் துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.