tamilnadu

img

முதல்வர் மருந்தகம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

முதல்வர் மருந்தகம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மங் கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங் கத்தின் முதல்வர் மருந்தகத்தை மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந் தகங்களை, பிப்.24 ஆம் தேதி தமிழ்நாடு முத லமைச்சர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட் டத்தில் மட்டும் 17 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட்டது. அவற்றில் கூட்டுறவு சங்கங் கள் மூலம் 13 மருந்தகங்கள், தொழில் முனை வோர் மூலம் 4 மருந்தகங்கள் துவங்கப்பட் டுள்ளன. இந்நிலையில், மங்கலம் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு சங்கம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் புதனன்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடந்து,  பல்லடம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட பூமலூர் ஊராட்சி,   வலையபாளையம் அங்கன்வாடி மையத் தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டார். வலையபாளையத்தில் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத் தின் கீழ் ஆய்வு மேற்கொண்டும், மங்கலம்  ஊராட்சி மங்கலம் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு சங்கம் நியாய விலை கடையில்  ஆய்வு மேற்கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்தும் பொருட்க ளின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம்மருந்தகங்களில் வெளிச்சந்தை யைக் காட்டிலும் 25% முதல் 90% வரை தள்ளு படி விலையில் ஜென்ரிக் மருந்துகள், பிரேண் டடு மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. இத்தள்ளு படியை பயன்படுத்தி பொதுமக்கள் குறை வான விலையில் தரமான மருந்துகளை வாங்கி பயன்பெறலாம்.