tamilnadu

img

போராட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

போராட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

தருமபுரி, ஏப்.22- சென்னையில் நடைபெறும் போராட் டத்திற்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளி கள் சங்க தலைவர்களை காவல் துறை யினர், பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து அடாவடியில் ஈடுபட்டுள் ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திரா வில் வழங்குவதைப் போன்று உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று, சென்னை எழி லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக, திங்களன்று இரவு சென்னை செல்ல தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற் றுத்திறனாளிகள் 250க்கும் மேற்பட் டோர் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர். இதனையறிந்த போலீ சார் சுமார் 50க்கும் மேற்பட்டோர், தரும புரி பேருந்து நிலையத்திலிருந்து வந்து, சென்னை செல்லவிருந்த 4 பேருந்து களை தடுத்து நிறுத்தி, மாற்றுத்திறனா ளிகளை வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி னர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீசாரின் அராஜகத்தை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும், இரவு முழுவதும் பேருந்திலேயே மாற் றுத்திறனாளிகளை அமர வைத்து சிறை வைத்தனர். இயற்கை உபாதைகள் கழிக்கக்கூட அனுமதிக்கவில்லை. பேருந்திலேயே இரவு முழுவதும் இருந்த மாற்றுத்திறனாளிகளை செவ் வாயன்று காலை கைது செய்தனர். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் எம்.மாரிமுத்து, மாவட் டத் தலைவர் கே.ஜி.கரூரான், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப் பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட் டம், குமாரபாளையத்திலிருந்து, மாற் றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமையில் ஏராளமானோர் சென்னை செல்ல புறப்பட்டனர். இதுகுறித்து தகவ லறிந்த குமாரபாளையம் போலீசார், மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதைக்கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர் வாகிகளை வீட்டு சிறையில் வைத்து, போராட்டத்திற்கு செல்ல விடாமல் போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மாற்றுத்திறனாளிகளை கைது செய்த காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் பங் கேற்க தருமபுரியிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை தருமபுரி காவல் துறையினர் தடுத்து நிறுத்தி இரவு முழுவதும் அலைக்கழித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சங்கம் அமைப்பது, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய வற்றை அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ளது. தங்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராட முற்படுகையில், அவர்க ளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அலைக்கழித்து, கைது செய்வது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, கைது செய்யப்பட்ட மாற்றுத்திற னாளிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.