10 சதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும், என பட்டு வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினவிழா மற்றும் மண்டல பொதுக் குழு கூட்டம், தருமபுரி அலுவலக உதவியா ளர் சங்க கட்டிடத்தில் புதனன்று நடைபெற் றது. சங்கத்தின் மண்டலத் தலைவர் பி.மாய கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.கணேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைத்தலைவர் பி.முனிராஜ் வரவேற்றார். அனைத்துத்துதுறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச் சாமி துவக்கவுரையாற்றினார். மண்டலச் செயலாளர் ஜி.குணசேகரன், பொருளாளர் என்.முருகமாணிக்கம் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பெருமாள் வாழ்த்தி பேசினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.தேவராஜன், இணைச்செயலாளர் எம்.முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 70 வயதை கடந்து ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். பட்டு வளர்ச்சித் துறையில் தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் அணைவருக்கும் குறைந்தபட்ச ஓய் வூதியமாக ரூ.8750 வழங்க வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் பணியில் சேர்ந்த நாள் முதல் இளநிலை ஆய்வாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வுநிலை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்றோருக்கு கமுட்டேசன் பிடித்தம் 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.