ஈரோடு மலைவாழ் “மலையாளி” மக்களை
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க சிபிஎம் வலியுறுத்தல்
ஈரோடு மாவட்ட மலைவாழ் “மலை யாளி” மக்களை பட்டியலிடப்பட்ட பழங் குடியினர் (ST) என அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர் மானம் வருமாறு, ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலைப் பகுதி மற்றும் அந்தியூர் வட்டம், பர்கூர் மலைப்பகுதிகளில் வசிக்கும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மலை யாளி எனப்படும் மலைவாழ் மக்கள், தங்களுக்கு உரிய பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற முடியாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில், வேலைவாய்ப்பில் புறக்க ணிக்கப்பட்டு வருகின்றனர். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தோழர் பிருந்தாகாரத் தலைமையில், இன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் தோழர் பெ.சண்முகம் ஆகியோர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்-கை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் மலை வாழ் சமூகத்தை சேர்ந்தவர்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க வலியு றுத்தினர். தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று ஒன்றிய அரசிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள் ளது. அதில் “கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களைப் பொதுவில் மலை யாளிகள் என்று அழைக்கின்றோம். இதற்கும் மலையாளி பழங்குடியின ருக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. மானுடவியல் ரீதியாக இரு தரப்பையும் பிரித்துவிட இயலும். கேரளாவை பூர் வீகமாகக் கொண்ட மலையாள மொழி பேசும் மக்கள் தங்களை தமிழகத்தில் மலையாளி பழங்குடியினர் என்று உரிமை கோர இயலாது. மேலும் தமி ழக மலையாளி பழங்குடிகள் பெரும்பா லும் மலைப் பகுதிகளில் வசிக்கின்ற னர். ஆனால் தமிழ்நாட்டில் மலையா ளம் பேசும் மக்களில் 96.4% பேர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இந்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டு ஈரோடு பகுதியில் வாழும் மலையாளி இனத்தவரை பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண் டும். அதற்காக இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் 431(2) மற்றும் 343(2)-இல் திருத்தம் கொண்டு வர வேண்டும்,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மலைவாழ் மலையாளி மக்களின் வாழ் வியல் நிலைமைகளை ஆய்வு செய்த வல்லுனர்களின் கருத்துருக்களும் ஒன் றிய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில், மொழி திணிப்பில் பாகுபாடு காட்டுவதைப் போல இப்பிரச்சனையிலும் பாராமுக மாக இருந்து வருகிறது. எனவே பெருந் திரளாக மலைவாழ் மக்கள் கூடியுள்ள இக்கருத்தரங்கின் மூலமாக, மலை வாழ் மலையாளி மக்களை பழங்குடியி னர் பட்டியலில் சேர்த்து உடனடியாக ஒன்றிய அரசு உரிய ஆணைகள் பிறப் பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வர வேற்புக்குழு தலைவரும், மூத்த தோழ ருமான கே.துரைராஜ் முன்மொழிந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி வழிமொழிந்தார்.