tamilnadu

img

டாஸ்மாக் கடைகளை குறைக்க நடவடிக்கை சிபிஎம் போராட்டத்தை

டாஸ்மாக் கடைகளை குறைக்க நடவடிக்கை சிபிஎம் போராட்டத்தை 

சேலம், மே 18- சேலம் மத்திய பேருந்து நிலை யம் அருகே டாஸ்மாக் கடைகளை  குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,  என மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களி டம் அதிகாரிகள் உறுதியளித்தனர். சேலம் மத்திய பேருந்து நிலை யம் அருகே 5 டாஸ்மாக் கடைகள்  உள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். மேலும், போக்குவரத் திற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியிலுள்ள டாஸ் மாக் கடைகளை குறைக்க வேண் டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், செல் லப்பாண்டியன், முருகானந்தம், சங் கர், ஜீவா மற்றும் அப்பகுதி பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அதில்,  ஜூன் 30 ஆம் தேதிக்குள் 5 டாஸ்மாக்  கடைகளில் 3 கடைகளை குறைக்க  நடவடிக்கை எடுக்கப்படும், என டாஸ் மாக் வட்டாட்சியர், மேற்கு துணை வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.