சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் கட்ட பஞ்சாயத்து: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவத்தில், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடந்த பிப்.22 ஆம் தேதியன்று 4 வயது சிறு மிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக் கில் முதியவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் பாதிக் கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி யின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், சிறுமி பாலியல் துன்பு றுத்தல் சம்பவத்தை மறைக்க முற்பட்டு, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட கிராம ஊர்த்தலைவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, சி.நாகராசன், மாவட்டக்குழு உறுப்பி னர் சி.கலாவதி, வட்டக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் பி.கோவிந்தசாமி, ஏ.சேகர், ஜி. பாண்டியம்மாள், சி.ராஜா, என்.வரதராஜன், கே.எம்.முருகேசன், ஜி.நக்கீரன், பி.முருகன், கே.எம்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.