பட்டியலின சிறுவன் மீதான தாக்குதலை கண்டித்து சிபிஎம், ததீஒமு ஆர்ப்பாட்டம்
தருமபுரி, மே 5 – பட்டியலின சிறுவன் மீது நடை பெற்ற ஆதிக்க சாதியினரின் தாக்கு தலை கண்டித்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப் பாட்டம் திங்களன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் தென்கரை கோட்டை அருகே சிறுவனை சாதி பெயரை சொல்லி தாக்கிய குற்றவாளி கள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும் பபெற வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவ னுக்கும் குடும்பத்தாருக்கும் பாது காப்பை உறுதிபடுத்தவேண்டும். சிகிச்சை, நிவாரணம் உள்ளிட்டவை களை வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலை யம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தி. வி.தனுஷன் தலைமை வகித்தார். தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீச்சன்யா ஆகி யோர் கண்டன உரையாற்றினார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் எ.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றியச் செயலாளர் பி.குமார், விவசாய சங்க வட்டத்தலைவர் எஸ். தீர்த்தகிரி, மாதர் சங்க வட்ட செயலா ளர் பி.கிருஷ்ணவேணி, வாலிபர் சங்க வட்ட செயலாளர் குப்பன், விவ சாய தொழிலாளர் சங்க வட்ட தலை வர் விஜயா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.