tamilnadu

img

கோவையில் மோடியை வரவேற்ற கொலை வழக்கு குற்றவாளி

கோவை வந்த மோடியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக கவுன்சிலர் வரவேற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூர் செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). மர வியாபாரியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் ஆறுமுகத்துக்கும், பாஜக கவுன்சிலர் வத்சலாவுக்கும் இடையே தொழில் தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வத்சலா உட்பட சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஆறுமுகம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் பாஜக கவுன்சிலர் சத்சலா உள்ளிட்ட 5 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் கடந்த வியாழனன்று கோவை வந்த பிரதமர் மோடியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வத்சலாவும் சந்தித்துள்ளார். இச்சம்பவம்  கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

;