tamilnadu

img

கிடப்பில் போடப்பட்ட தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணி

கிடப்பில் போடப்பட்ட தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணி

முட்டுக்கட்டை போடும் அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்தும் திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ள நிலையில், இதற்கு முட் டுக்கட்டை போடும் அதிகாரிக ளைக் கண்டித்து பொதுமக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி, கபிலர் மலை, ஊராட்சி ஒன்றியம், மோக னூர் ஒன்றியம் மற்றும் வேலூர், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர் என 5 பேரூராட்சிகள், 40 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை, நெல், மரவள்ளி, கோரை போன்ற பனப்பயிர் விவ சாயம் பிரதான தொழிலாக உள் ளது. ஜேடர்பாளையம், கபிலர் மலை, பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், சாமிநாதபுரம், பெரியசோளிபாளையம், சின்ன சோளிபாளையம், பெரிய மரு தூர், சின்ன மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. சில நேரங்க ளில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டையில் தீ பிடித்து எரியும் போது கரூர் மாவட்டம், வேலாயு தம்பாளையம் மற்றும் நாமக்கல் லில் இருந்து வரும் தீயணைப்பு வாகனம் வர கால தாமதமாவ தால் பெரும் பாதிப்பு ஏற்படுகி றது. கபிலர்மலை பகுதியில் தேங் காய் மஞ்சு நார் தயாரிக்கும் ஆலைகளில் உள்ள கண்வேய ரில் அடிக்கடி தீப்பிடித்து தேங்காய் நார் முற்றிலும் எரிந்து விடுகி றது. அதனால் ஆலை உரிமை யாளர்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். அதேபோல் விவசாயத் தோட்டங்களிலும், வீடுகளிலும் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியும் போது சரியான நேரத்தில் தீயணைப்பு வாகனம் வர முடியாத தால் சேத மதிப்பு அதிகரித்து வரு கிறது. இதனிடையே, கடந்த 2022  ஆம் ஆண்டு பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கபிலர்மலை மற்றும் பெரிய சோளிபாளையம் ஊராட்சி சிறு கிணத்துப்பாளையம் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். ஆனால், அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இத்திட்டத்திற்கு அதிகாரி கள் சிலர் முட்டுக்கட்டை போடு வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நி லையில், விரைந்து தீயணைப்பு நிலையம் அமைக்கக்கோரி பிலிக்கல்பாளையம் பகுதிக ளைச் சேர்ந்த பொதுமக்கள் பர மத்திவேலூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு வியாழனன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.