tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்தை பரிசீலித்து அமல்படுத்துவோம்

கோவை:
மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழகத்தில் பரிசீலித்து அமல்படுத்துவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.   நாடு முழுவதும் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தவில்லை. இந்நிலையில் இதுகுறித்து  கோவையில் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, நல்ல திட்டங்களை அறிவித்தால் நாங்கள் ஆதரிப்போம். அதே வேளையில் இன்றைக்கு மோட்டார் வாகனச் சட்டம் என்பது மிக ஒரு நல்ல சட்டம். இன்றைக்கு சட்டத்தின் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். நான் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றபோது இதனை  பார்த்தோம்.  108 ஆம்புலன்ஸ் சேவை வசதியில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை வசதியையும் செயல்படுத்த நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இன்றைக்கு விபத்துகள் எப்படி நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறபோது விபத்துகள் நடக்கிறது.போக்குவரத்து விதிகளை மீறுகின்றபோதும் விபத்துகள் நடக்கிறது. அரசு என்ன செய்ய வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால்தான் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும். வெளிநாடுகளில் எல்லாம் மூன்று முறை விதிகளை மீறினால் தானாகவே லைசென்ஸ் கேன்சல் ஆகி விடும். எல்லா சிக்னல்களையும் கம்ப்யூட்டருடன் இணைத்துள்ளனர்.
விதிகளை மீறுகின்ற போதுதான் விபத்துகள் நடக்கின்றது. 

ஆகவே இந்த விபத்துகளை எப்படி தடுக்க முடியும்.  இதனை தடுப்பதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. சில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. சில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் அதனை பரிசீலித்து எந்தெந்த வகையில் செயல்படுத்த வேண்டுமோ அந்த வகையில் செயல்படுத்துவோம்.உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து பெரும்பாலும் இன்றைக்கு ஹெல்மெட் அணிந்துதான் போய் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் விதிமுறைகளை மீறுகின்றபோது அவர்களிடத்திலே அபராதம் வசூலிக்கப்படு கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
 

;