லோக் ஆயுக்தா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வீ.ராமராஜூக்கு பாராட்டுவிழா
லோக் ஆயுக்தாவின் உறுப்பி னராக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ள டாக்டர் வீ. ராம ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக இருந்து, அமைச்சர் கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரி கள் உள்ளிட்ட அரசு அலுவலர்க ளின் மீதான ஊழல் குற்றச்சாட்டு களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா வின் உறுப்பினராக நியமனம் செய் யப்பட்டுள்ள டாக்டர் வீ.ராம ராஜூக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நாமக்கல் சிவில் வழக்கறிஞர் கள் சங்கமும், குற்றவியல் வழக்கறி ஞர்கள் சங்கமும் இணைந்து ஏற் பாடு செய்திருந்த பாராட்டு விழா விற்கு நாமக்கல் சிவில் வழக்கறி ஞர் சங்க தலைவர் டி. மோகன் ராஜ் தலைமை வைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதியாக சுமார் 700-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் வீ. ராமராஜ். இந்தியா விலேயே மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற அளவில் அதிக சமரச தீர்வு களை வழங்கியவர். நீதிமன்ற உட் கட்டமைப்பை மேம்படுத்தி யது நீதிமன்ற நிர்வாகத்தை வலுப் படுத்தியது மற்றும் விரைவான நீதியை வழங்கியது ஆகியன அவ ரது செயல்பாடுகளின் முக்கிய அம் சங்கள் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் ஆர். ரமோலா தெரிவித்தார். நாமக்கல் குற்றவியல் வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் ஆர். அய் யாவு, வழக்கறிஞர்கள் சங்க செய லாளர்கள் கோபால், ராஜவேலு, மூத்த வழக்கறிஞர்கள் குமரேசன், காளியண்ணன், ஐயப்பன், இளங் கோவன், திருச்செங்கோடு பரணி தரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். இவர் நாமக்கல்லில் பதவி ஏற்கும் போது பத்தாண்டுகளுக்கு மேலான வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது ஓராண்டுக்கு மேலான வழக்குகள் கூட நிலுவை யில் இல்லாத அளவுக்கு வழக்கு களை தீர்த்து வைத்தவர் வீ. ராம ராஜ் என்று நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். முடிவில் ஏற்புரையாற்றிய டாக்டர் வீ. ராமராஜ் பேசுகையில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்பினரையும் பாது காக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு பாதுகாப்பு அமைப் புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, இதைப்போலவே, மனித உரிமை கள் ஊழல் ஒழிப்பு உட்பட ஒவ் வொரு பொருள் தொடர்பாகவும் சட்டங்கள் இயற்றப்பட்டு அதற் கான அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மக்களின் உரிமை களையும் அதனை காக்கும் அமைப்புகளை பற்றியும் பொது மக்கள் அறிந்து கொள்ள வேண்டி யது அவசியமாகும். குழந்தைகளின் உரிமைகள் எவை? என்பதை தெரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் குழந்தை கள் உரிமைகள் ஆணையத்தை பற் றிய விவரங்களையும் முழுமை யாக அறிந்து கொண்டால்தான் குழந்தை உரிமை மீறல்களை தவிர்க்க இயலும். நுகர்வோரின் உரிமைகள் எவை? என்பதையும் நுகர்வோரின் பிரச்சனைகள் எவை? என்பதையும் அறிந்து கொண்டு அதனை தீர்க்க நுகர் வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுகுவது? எவ்வாறு வழக்கு நடத்துவது? என்று விவரங்களை தெரிந்து கொண்டால்தான் நுகர் வோர் உரிமைகளை பாதுகாக்க முடியும். நல்லாட்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கும் ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் அமைப்புக ளான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கப்பட வேண்டும். இத்தகைய விழிப் புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசும் வழக்கறிஞர்கள் சங்கங் களும் தன்னார்வ அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதி மன்ற ஊழியர்கள் சார்பில் டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.