கோவை மாநகராட்சியைக் கண்டித்து,
மே 21 இல் சிபிஎம் ஆர்ப்பாட்டம் கோவை, மே 16– மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வகையில் கோவை மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மா னத்தை கண்டித்து மே 21 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி மாபெ ரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 14-ம் தேதி மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 101, 102 தீர்மானங்கள், குடிநீர் இணைப்பு - பாதாளச்சாக்கடை இணைப்பு ஆகியவற்றிற் கான கட்டணங்கள் அவை கொண்டுள்ள கட்டணத்தையும் - வசூலிக்கும் முறையையும் - அபராதத்தையும் தீர்மானிக்கி றது. இது மக்களை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே சொத்து வரி உயர்வால் கடும் சிரமத்துக்கு மக்கள் உள்ளாகி இருக்கிற சூழலில், மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் - பாதா ளச்சாக்கடை கட்டணங்களை மீண்டும் உயர்த்துவது வேத னையானது, கண்டிக்கத்தக்கது. எல்லாவற்றுக்கும் அபராத கட்டணங்கள் எப்போ தெல்லாம் உயர்த்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் பழைய இணைப்புதாரர்களும் கட்ட வேண்டும். ஆண்டுக்கு மூன்று தவணை கட்டணம் உயர்வு என்பதெல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கு சமம். பாதாள சாக்கடை ஒரு முறை புதைத்தால் 30 ஆண்டு களுக்கு ஆகும் செலவும் குறைவு. செலவே இல்லாமல் கழிவு களை வெளியேற்றி, மக்களுக்கு சேவை செய்வதற்கு மாறாக, பன்மடங்கு கட்டணம் விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் கோவை மாநகராட்சியிலுள்ள குடி நீர் ஆதாரம் இயற்கையின் வரம். இதை விநியோகிக்கக் கூடிய மாநகராட்சி தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி மக்களை சுரண்டுவது அநியாயம். அபராத விதிப்பு அநா கரீகமானது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மக்களை கடுமையாக பாதிக்கும் வரி உயர்வு - அபராதத்தை ரத்து செய்யக் கோரி 101, 102 தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகிற 21 ஆம் தேதி காலை மாநகராட்சி முற்றுகை போராட்டம் நடத்து கிறது. பொதுமக்களும், நகர் நல ஆர்வலர்களும் திரளாக பங் கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா நிலத்தின் சாலை ஆக்கிரமிப்பு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்
சேலம், மே 16- பட்டா நிலத்தின் சாலையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, பாதிக்கப் பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விவசாயம் செய்து வரு கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசால் இலவச பட்டா நிலம் வழங்கப்பட்ட நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த சிலர் நிலத் திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதுகு றித்து பலமுறை புகாரளித்தும், அதிகாரிகள் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்றுக்கூறி, வெள்ளியன்று பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் பாய், தலையணையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வழக்குப்பதிவு
பொள்ளாச்சி, மே 16- பொள்ளாச்சி அருகே தனியார் கயிறு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் சிறுமி ஒருவருக்கு அத்தொழிற்சாலை உரிமையா ளர் பாலியல் தொல்லை கொடுத்த நிலை யில், அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவரை போலீ சார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமி அவரது பாட்டி யின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவர், தனது தந்தை வேலை செய்து வரும் கயிறு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்த போது, அந்த நிறுவனத்தின் உரிமை யாளர் அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த சிறுமி, அந்நிறுவனத்தில் இருந்து விலகி வேறு ஒரு கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு வேலை செய்து வந்த சிறுமி பணம் திருடி விட்டதாக பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து, கயிறு தொழிற்சாலை உரிமையாளர் அருண் குமாரிடம் கொண்டு வந்து விட்டுச்சென் றுள்ளனர். இதனையடுத்து, அருண்குமார், சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சிறுமியை அவ ரது தாயார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்து தனியார் நிறுவன உரிமையாளரான அருண்குமார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அருண்குமாருக்கு உதவியதாக சிறுமியின் தந்தை ஜனகராஜ், அத்தை சுகன்யா ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக, பாதிக்கப்பட் சிறுமியை சிபிஎம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறு தல் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை உங்க ளோடு உறுதியாக நிற்போம், என நம்பிக்கை அளித்தனர்.