tamilnadu

img

தோழர் மாணிக்கம் படத்திறப்பு விழா

தோழர் மாணிக்கம் படத்திறப்பு விழா

தருமபுரி, ஜூன் 21- அரசு ஊழியர் சங்கத்தின் மறைந்த தலைவர் தோழர் மாணிக்கத்தின் படத்திறப்பு விழா சனியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு வட்ட கிளைச் செயலாளராக பணியாற்றி வந்த  மறைந்த மாணிக்கம் அவர்களின், படத்திறப்பு விழா சனி யன்று நடைபெற்றது. சங்கத்தின் தருமபுரி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், உருவப்படத்தை மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, பொருளாளர் எம்.அன்பழகன், மாநில செயற் குழு உறுப்பினர் சக்தி, மாவட்ட நிர்வாகிகள் முருகன், மகேஸ்வரி, தேவகி, யாரப்பாட்ஷா, ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பணி நிறைவு பெற்ற சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட முன்னாள் தணிக்கையாளர் முனிராஜ்  ஆகியோருக்கு, வாழ்த்து தெரிவித்து நினைவுப்பரிசு வழங் கப்பட்டது.