tamilnadu

img

போராட்டத்தின் முன்னணியில் தோழர் ஈஸ்வரன்!

போராட்டத்தின் முன்னணியில் தோழர் ஈஸ்வரன்!

வெள்ளியம்பாளையம் மற்றும் வடுகபாளையம் கிராமங்க ளில் வாலிபர் சங்கம், விவ சாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலா ளர் சங்கம் ஆகியவற்றை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றியவர் தோழர் ஈஸ்வரன். அப்பகுதியில் பருத்தி விவசாயம் பிரதான மாக இருந்தது. ஆண்களுக்கு எட்டு ரூபா யும், பெண்களுக்கு ஐந்து ரூபாயும் கூலியாக வழங்கப்பட்டது. ஈஸ்வரன் தலைமையில் விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வுக் காக சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தி னர். இதனால் ஆத்திரமடைந்த நிலவுடைமை யாளர்கள், தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்தனர். இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் “உணவுக்கு வேலை” திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரியது. அதன்படி, தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியிலிருந்து குடிநீர்க் கிணறு வரை சாலை அமைக்கும் பணி தொடங்கியது. தின சரி ஐந்து ரூபாய் பணமும் ஒரு கிலோ அரிசி யும் கூலியாக வழங்கப்பட்டதால், ஏராளமான தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். நிலப்பிரபுக்கள் இந்தத் திட்டத்தை முடக்க முயன்றனர். இதனையறிந்த அப்போதைய கோவை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் கே. ரமணி தலைமையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதன் விளைவாக, “உணவுக்கு வேலை” திட்டம் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த நிலப்பிரபுக்கள், செங்கொடி இயக்கத்தினர்தான் இதற்கு கார ணம் என்று குற்றம் சாட்டினர். 1981 டிசம்பர் 1  ஆம் தேதி, கடைக்குச் சென்ற ஈஸ்வரன் மற்றும் அய்யாசாமி ஆகியோர் கொடூரமாகத் தாக்கப் பட்டனர். ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். அய்யாசாமி மருத்துவமனையில் 50  நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். ஈஸ்வரனின் உடல், உடுமலை அரசு மருத்து வமனையிலிருந்து வெள்ளியம்பாளையம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, செங்கொடி இயக்கத் தலைவர்கள் மற்றும் கிரா மப்புற உழைக்கும் மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. வெள்ளியம்பாளையம் ஈஸ்வரன் வழியில், விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர் களையும் பாதுகாப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்று இந்நன்னாளில் உறுதியேற்போம்.