பிரசவத்தின்போது கர்ப்பிணி உயிரிழப்பு தனியார் மருத்துவமனை மீது புகார்
நாமக்கல், ஏப்.17- பிரசவத்தின்போது கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தனியார் மருத்துவமனை மீது நாமக்கல் காவல் நிலையத்தில் புகார ளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள தேவநாதன் கிராமத் தைச் சேர்ந்தவர் ராஜூ (32). இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள குரால்நத்தம் பகுதியைச் சேர்ந்த பிரபாவதி (28) என்பவ ருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாமக்கல் முருகன் கோவில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரில் இத்தம்பதி வசித்து வந்த நிலையில், பிரபாவதி கருவுற்றார். மோகனூரிலுள்ள தனியார் மருத்துவமனையில், இரு தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக பிரபா வதி அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவத்திற்காக காத்திருந்த நிலை யில், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. இத னையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம், நாமக் கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பிரபா வதியை அனுப்பி வைத்தனர். இதையடுத்து புதனன்று நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் பிரசவிக்கும் முன்பாகவே பிரபா வதி உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையின் காலதாமதத் தாலேயே பிரபாவதி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி, நாமக்கல் காவல் நிலையத்தில் கணவர் ராஜு மற்றும் அவரது உறவினர்கள் புகாரளித்த னர். அதன்பேரில், காவல் துறையின் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
ஏர்ஹாரன்: பேருந்துகளுக்கு அபராதம்
கோவை, ஏப்.17- அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் மற் றும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துக ளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு பொதுமக் களை அச்சுறுத்தும் வகையிலும், பேருந்துகளை இயக்குவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், வியாழனன்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள், காந்திரபுரம் பேருந்து நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தி னர். அதில் 90 டெசிபலுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் பேருந்துக ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பேருந்துகளில் பொருத்தப் பட்ட ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.