tamilnadu

img

ஆடுதுறையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

ஆடுதுறையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா, வீரசோழன் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், மயிலாடுதுறை முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் செ.இராம லிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.  தொடர்ந்து கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பல்வேறு வட்டாரங்களிலுள்ள சுமார் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன. கும்பகோணம் கோட்ட, சார்ஆட்சியர் ஹ்ரித்யா விஜயன், மாவட்ட திட்ட அலு வலர் ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.