tamilnadu

img

விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப்.19– கூலி உயர்வு மற்றும் மின் கட் டண குறைப்பு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கோவை மற் றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் கள் கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே மார்க் சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்தி ருந்த நிலையில், இப்போராட்டத் திற்கு ஆதரவாக ஞாயிறன்று (இன்று) மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.  கோவை, திருப்பூர் மாவட்டங் களை சேர்ந்த விசைத்தறியாளர் கள், கருமத்தம்பட்டியில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 12 விசைத் தறியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனிடையே, விசைத்தறியாளர் களின் கோரிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந் தது. விசைத்தறியாளர்கள் 60 சத வீத கூலி உயர்வு கோரிய நிலை யில், ஜவுளி உற்பத்தியாளர்கள் வெறும் 7 சதவீத உயர்வை மட்டுமே முன்மொழிந்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தப் போராட்டத்தின் காரண மாக சுமார் 2.5 லட்சம் தொழிலாளர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், நாளொன்றுக்கு சுமார் 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. இதுவரை மொத்தமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் உற் பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாக விசைத்தறியாளர் சங்கம் தெரிவித் துள்ளது. இதனிடையே, வெள்ளியன்று நடைபெற்ற காடா துணியில் கையெழுத்து இயக்கம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அன்று இரவு, உண்ணா விரதப் பந்தலில் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள் ளப் போவதாக தகவல் பரவியதால் பதற்றம் நிலவியது. இதனால், 500-க்கும் மேற்பட்ட விசைத்தறியா ளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்து இருசக்கர வாகனங் களைக் கொண்டு தடுப்புகள் அமைத்தனர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கு போராட்டக்காரர் கள் ஒப்புக்கொண்டதால் நிலைமை தணிந்தது. வாலிபர் சங்கம் ஆதரவு இந்நிலையில், விசைத்தறியா ளர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கோவை மாவட்டக்குழு சனி யன்று உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு கதர் ஆடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்த னர். இந்த நிகழ்வில் வாலிபர் சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, செயற்குழு உறுப்பி னர் தீபிகா மற்றும் நிர்வாகிகள் குரு  சாரதி, பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், விசைத்தறி தொழிலா ளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. கட் சியின் சார்பில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கருமத்தம்பட்டியில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது குறிப் பிடத்தக்கது.