tamilnadu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது அகில இந்திய மாநாடு , மதுரை

மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும்!

அமைச்சர் எ.வ.வேலு உறுதி கோவை, ஏப்.4– மதுக்கரை எல்.அன்.டி புறவழிச்சாலை விரைவில் 6 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்தார். கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை வெள்ளியன்று அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை காந்திபுரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரி யார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு வருகி றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய இந்த  நூலகம், 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்று அறிவித்திருந் தார். எனவே, குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க தீவிர மாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  தரமான கட்டுமானத்துடன் நீண்ட காலம் நிலைத்திருக் கும் வகையில் இந்த நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற் கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. ரூ.300 கோடி மதிப்பீட்டில், கட்டிடப் பணிகளுக்கு ரூ.250 கோடி யும், புத்தகங்கள் மற்றும் கணினி போன்ற வசதிகளுக்காக ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரை தளம் இல்லாமல் 7 தளங்களுடன் கட்டப்படும் இந்த நூலகத்தில், 200 கார்கள் மற்றும் 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும்  வசதி, முதல் இரண்டு தளங்களுக்கு எஸ்கலேட்டர் மற்றும் மற்ற தளங்களுக்கு லிஃப்ட் வசதி ஆகியவை இடம்பெறும். மேலும், 300 பேர் அமரும் கலையரங்கம், குழந்தைகள் நூல கம் மற்றும் தமிழ் மொழிக்கு தனிப்பிரிவு உள்ளிட்ட வசதி களும் இங்கு அமைக்கப்பட உள்ளன. புதிய தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் வேகமாக நடை பெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி ஜனவரி மாதம் நூல கம் திறக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித் தார். மேலும், தமிழ்நாட்டில் 100 ஆண்டுகள் பழமையான கட்டி டங்கள் முதல் முகலாயர் காலத்து கட்டிடங்கள் வரை புனர மைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறி னார். சுண்ணாம்பு கலவை போன்ற பாரம்பரிய முறைகள் பயன்படுத்தப்படுவதால், இந்த பணிகளுக்கு கால தாமதம் ஏற்படுவதாகவும், கட்டிடங்களின் உறுதித்தன்மைக்கு முக்கி யத்துவம் அளித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எல்.அன்.டி புறவழிச்சாலை தொடர்பாக ஒன்றிய அமைச் சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தப்பட்டதன் விளை வாக தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்காக முதற் கட்டமாக ரூ.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையை மாநில அரசிடம் ஒப்படைக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த சாலை 6 வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். மாநில அரசு பொறுப்பேற்ற வுடன் பணிகள் தொடங்கப்படும். 27 கி.மீ தொலைவுக்கு ஒன் றிய அரசு சாலை அமைத்தாலும், அதன் பணிகளையும் மாநில அரசு ஆய்வு செய்யும். கோவை மேற்கு புறவழிச்சாலைப் பணிகள் மூன்று கட் டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டப் பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பணி களுக்கான நில எடுப்பு 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மே  மாதம் ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளது. மூன்றாம் கட்ட நில  எடுப்பு பணிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெற்று வருகிறது. இது முடிந்த பின்னரே கிழக்கு புறவழிச்சாலைப் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியும். அவிநாசி மேம்பாலப் பணிகளில் ரயில்வேயிடம் இருந்து  தடையில்லா சான்று (NOC) பெற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. NOC கிடைத்த 2 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். இது தொடர்பாக ஒப்பந்ததாரர்களுடனான ஆய்வுக் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள் ளது. தண்ணீர்பந்தல் மேம்பாலப் பணி நீதிமன்ற வழக்கில் உள்ளது. நீலிகோணம்பாளையம் மேம்பாலப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.   இந்நிகழ்வில், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலா ளர் ஜெயகாந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.