tamilnadu

img

தோழர்கள் கே.ரமணி, மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

தோழர்கள் கே.ரமணி, மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை, மே 30- மார்க்சிஸ்ட் கட்சியின் மகத் தான தலைவர்கள் தோழர் கே. ரமணி, தோழர் மைதிலி சிவராமன்  ஆகியோரின் நினைவு தினம் வெள் ளியன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. தமிழக தொழிற்சங்க இயக்கத் தின் உரிமைப்போராளியும், மார்க் சிஸ்ட் கட்சியின் மகத்தான தலை வர்களில் ஒருவருமான தோழர் கே. ரமணியின் 19 ஆம் ஆண்டு நினைவு  தினமும், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க ஸ்தாபகத் தலை வர்களுள் ஒருவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரு மான தோழர் மைதிலி சிவராமன் ஆகியோரது நினைவு தினம் வெள் ளியன்று அனுசரிக்கப்பட்டது. தோழர் கே.ரமணியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழு அலுவ லகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின்  மூத்த தோழர்கள் பி. ஆர்.நடராஜன், யு.கே.வெள்ளிங் கிரி மற்றும் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே.அஜய்குமார், கே.எஸ். கனகராஜ், வி.ஆர்.பழனிச்சாமி, வி. இராமமூர்த்தி மற்றும் தீக்கதிர் கோவை பதிப்பு மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி, செங்கொடிபுரத்தில் தோழர் மைதிலி சிவராமன் அவர் களின் உருவப்படத்துக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து,  ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்த சாமி, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, ஒன்றியச் செய லாளர் எம்.மீனாட்சி மற்றும் அலுவ லக செயலாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு தோழர் கே.ரமணி, தோழர் மைதிலி சிவராமன் ஆகியோர் நினைவு தினத்தையொட்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத் தில் அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, பி.சுந்தரராஜன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.