கோவை அரசு மருத்துவமனை சாதனை! முதல்வர் காப்பீடு திட்டத்தில் 92 பேருக்கு பேஸ் மேக்கர் பொருத்தம்
கோவை அரசு மருத்துவமனை இதுவரை 92 பேருக்கு “பேஸ் மேக்கர்” கருவி பொருத்தப்பட்டுள் ளது. மேலும், தமிழகத்திலேயே முதல்முறையாக சி.ஆர்.டி - டி (CRT - D) என்ற பேஸ்மேக்கர் கருவியும் முதல்வர் காப்பீடு திட்டத்தில் பொருத்தப்பட்டு சாதனை படைத் துள்ளது. கோவை அரசு மருத்துவமனை யில் கோவை மட்டுமல்லாமல் திருப் பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா எல்லையான பாலக்காடு, வாளை யாறில் இருந்தும் ஏராளமான மக் கள் அறுவை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக இருதய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, மகப்பேறு, அதி தீவிரசிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறந்து விளங்குகிறது. இருதய துடிப்பின் அளவு குறை யும் போது அதனை சீராக்க பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்படு கிறது. ஆனால் தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே பெரும் பொருட்செலவில் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019 இல் இருந்து கோவை அரசு மருத்துவமனை யிலும் முதல்வர் காப்பீடு திட்டத் தின் மூலம் பேஸ் மேக்கர் கருவி பொறுத்தும் திட்டம் அமலானது. அதன்படி, ஏழை எளிய மக்க ளுக்கு உயர் தர சிகிச்சைகள் இல வசமாக செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கோவை அரசு மருத்து வமனையில் மட்டும் சுமார் 92 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பேஸ் மேக் கர் கருவி வெற்றிகரமாக பொருத் தப்பட்டு அவை முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருப்பூர் மாவட் டத்தை சேர்ந்த சரவணக்குமார் (54) அதிகளவு இருதய துடிப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதய துறை சிறப்பு மருத்துவர்கள் 3 முறை மின்னேற் றம் கொடுத்து இருதய துடிப்பை சீராக்கி காப்பாற்றினர். தொடர்ந்து அவருக்கு ஏற் கனவே பேஸ்மேக்கர் பொருத்தப் பட்ட நிலையில் இருதய துடிப்பு அதி கரித்தால் தானாக மின்னேற்றம் கொடுக்கும் சி.ஆர்.டி - டி (CRT - D) கருவியை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தினர். ரூ.10 லட்சம் மதிப்பி லான கருவி மற்றும் அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள் ளது. இது குறித்து பேசிய கோவை அரசு மருத்துவமனை இருதயவி யல் துறை தலைவர் நம்பிராஜன், “உயிருக்கு ஆபத்தான நிலையில் இருதய துடிப்பு அதிகமான நிலை யில் சரவணக்குமார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவ ருக்கு 3 முறையில் மின்னூட்டம் கொடுக்கப்பட்டு இருதய துடிப்பை சீர் செய்து இக்கருவியை பொறுத் தினோம். தனியார் மருத்துவமனை களில் மட்டுமே இக்கருவி பொருத் தப்படும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டி லான இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ் வொரு மாதமும் அவரை வர வழைத்து கணினி மூலம் கருவி செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளோம். கடந்த 2019 வரை நமது மருத்துவமனையில் ‘பேஸ் மேக் கர்’ என்ற கருவி பொருத்தப்படு கிறது. இதுவரை 92 நபர்களுக்கு கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5 மாவட்டங்களில் இருந்து பேஸ் மேக்கர் பொருத்த பரிந்து ரைத்து அனுப்புகின்றனர். அவர் களுக்கும் முறையாக பரிசோதனை கள் செய்யப்பட்டு தேவைப்பட் டால் பேஸ் மேக்கர் கருவி பொருத் துகிறோம். கோவை அரசு மருத்து வமனையை பொறுத்தவரை சிறப் பாக சிகிச்சைகள் அளிக்கப்படுவ தோடு நோயாளிகள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற னர்” என தெரிவித்தார். சமீபத்திய காலத்தில் பொது மக்களுக்கு வரும் நோய்கள் அதற் கான நவீன சிகிச்சைகள் என நோய்களுக்கு ஏற்ப கட்டணங் களும் அதிகளவில் உள்ளது. இந் நிலையில் தமிழ்நாடு அரசின் நடவ டிக்கைகளால் ஏழை எளிய மக்க ளுக்கும் தரமான உயர்தர சிகிச்சை கள் இலவசமாக கிடைப்பது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.