tamilnadu

img

தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் கோவை மாநகராட்சி அரசுப்பள்ளிகள்!

தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் கோவை மாநகராட்சி அரசுப்பள்ளிகள்!

- கவி - கோவை, ஏப்.18- கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாநக ராட்சி பள்ளி ஒன்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு புதிய வச திகளைப் பெற்று அசத்தி வருகிறது.  கோவை, சரவணப்பட்டி, ஷாஜகான் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி அனைவரின் கவனத்தை யும் ஈர்த்துள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 8  ஆம் வகுப்பு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாந கராட்சி நிர்வாகம் தனியார் பங்களிப்புடன் பல் வேறு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பள்ளியில் புதிதாக அதிநவீன அறிவியல் ஆய்வகம் திறக்கப்பட் டுள்ளது. 4 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆய்வ கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய LED திரை, அண்டவெளி படங்கள், நுண்ணோக்கி (Microscope), மனித உடலின் இதயம், சிறு நீரகம் போன்ற பல்வேறு பாகங்களின் மாதிரி வடிவங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆய்வ கம் மாணவர்களை வெகுவாக கவர்ந்துள் ளது. அதுமட்டுமின்றி, பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் மினி நூலகங்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பு மாணவர்க ளின் வயது மற்றும் அறிவுக்கு ஏற்றவாறு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு கதைப் புத்தகங்கள் மற்றும் வாசிப்பு நூல்கள்  இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தி யிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவை மாநகராட்சி, நமக்கு நாமே திட் டம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதி ஆகியவற்றின் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகி றது. சமீபத்தில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள் ளியில் “விர்ச்சுவல் ரியாலிட்டி” (மெய்நிகர்) வகுப்பறை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் கதிர்வேல் கூறுகையில், “தற்போதைய அரசு பொறுப்பேற்றது முதல் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்  இந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாண வர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகை யில் அறிவியல் ஆய்வகம் மற்றும் மினி நூல கங்கள் போன்ற பல்வேறு வசதிகளை ஏற் படுத்தியுள்ளோம். எங்கள் பள்ளி மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடத்திய கலைத் திருவிழாவில் ‘கலை இளவரசி’ விருதுகளை வென்றுள்ளனர். மாந கராட்சி பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும்  மாணவர்களின் திறமைகளை பார்த்து தற் போது மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந் துள்ளது. முன்பு 400 ஆக இருந்த மாணவர் களின் எண்ணிக்கை தற்போது 700 ஆக அதிக ரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள  தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களைச் சேர்க்க வீடு வீடாகச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் மாண வர்களின் கற்றல் திறன் தனியார் பள்ளி களை விட சிறப்பாக இருப்பதே இதற்குக் கார ணம்” என்று தெரிவித்தார். சரவணம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் இந்த புதிய முயற்சிகள், அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு எந்த வகை யிலும் சளைத்தவை அல்ல என்பதை நிரூ பிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இது மற்ற மாநகராட்சி பள்ளிகளுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்பதில் எவ் வித ஐயமும் இல்லை.