tamilnadu

img

அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் கைகலப்பு

அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் கைகலப்பு

கோபியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயல்வீரர் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொகுதி பொறுப்பாள ரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பூத்கமிட்டி உறுப்பினர்களுக்கு தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி னார். அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்தியூர் பகுதி யைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் திடீரென எழுந்து செங்கோட்டை யனை பார்த்து கட்சி நிர்வாகியாக இருக்கும் எனக்கு எங்கு அதி முக கூட்டம் நடந்தாலும் தகவல் தெரிவிப்பதில்லை என்று  ஆவேசமாக பேசினார். அப்போது மேடையில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் நீயார் எந்த ஊர் என கேட்டு நிர்வாகியை தாக்கத் துவங்கினர்.  மேலும், செங்கோட்டையன் முன்னிலையில் இருக்கைகள் பறந்தன. அந்த நிர்வாகியை விடாமல் துரத்தி சென்று  தாக்குதலில் ஈடுபட்டதால், நிலைதடுமாறி கீழே சாய்ந்து மண்ட பத்தை விட்டு வெளியேறினார். சொந்த கட்சியினரிடையே தாக்குதல் நடத்திய சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கைகலப்பின்போது தனியார் தொலைக்காட்சி யின் கேமார தாக்கப்பட்டதாகவும், செய்தியாளர்களை ஒளிப் பதிவு செய்ய வேண்டாம் என சில நிர்வாகிகள் எச்சரித்த தாகவும் தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் அமைப்பு தின கொடியேற்று விழா கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 13 ஆவது சங்க அமைப்பு தினம் மற்றும் கொடியேற்று விழா  கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதனன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு தெற்கு வட்டக்கிளைத் தலைவர் எஸ்.தங்கபாண்டி தலைமை வகித்தார். தெற்கு வட்டக்கிளை துணைத்தலைவர் வி.பாலுசாமி வரவேற்றார். கோரிக்கை களை விளக்கி தெற்கு வட்டக்கிளை செயலாளர் வி.இராஜேந் திரன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.அருண கிரி அமைப்பு தின உரையாற்றினார். ஜி.விக்டர் நன்றி கூறி னார்.