tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கட்டுமானப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 12- கட்டுமானப் பொருட்களின் கடும் விலை உயர்வை கண் டித்து ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட கட்டுமானப் பொறியா ளர்கள் சங்கத்தினர் திங்களன்று ஈரோடு காளை மாட்டு சிலை  அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண் டும். ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் விலை உயர்வு கட்டுப்ப டுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்கள் விலையை அரசு  கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். சிமெண்ட், கம்பி  போன்ற முக்கியப் பொருட்களின் விலை நிலையாக  இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  அத்தியாவசியமான கட்டுமானப் பொருட்கள் மேம்பாட்டு கொள்முதல் நிலையங்கள் மூலம் சீரான விநியோகம் உறுதி  செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க உடனடி தீர்வுகள் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு ஸ்டில் இன்ஜினியரிங் அசோசியேஷன் தலைவர் ராஜேஷ் தமிழரசன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித் தார். செயலாளர் குமார வெங்கடேஷ், பொருளாளர் மணிகண் டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங் களை எழுப்பினர்.

பொது வேலை நிறுத்த  துண்டு பிரசுரம் வழங்கல் 

நாமக்கல், மே 12- ஒன்றிய அரசை கண்டித்து, மே 20-இல் நடை பெற்றவுள்ள பொது வேலை நிறுத்தத்தின் தேவை குறித்து  பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் இயக்கம்  நடைபெற்றது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத  கொள்கைகளுக்கு எதிராக உள்ள நான்கு தொகுப்பு சட் டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, மத்திய  தொழிற்சங்கங்கத்தினர் வருகிற மே 20 ஆம் தேதியன்று நாடு  தழுவிய அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலை யில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையத்தில் வேலை நிறுத்ததின் தேவை குறித்து விளக் கும் வகையில்  துண்டு பிரசுரம் பொது மக்களிடம் வழங் கும் நிகழ்வு ஞாயிறன்று  நடைபெற்றது. காவேரி ஆர்.எஸ்., புதுப்பாளையம், பெரியார் நகர்,  ஆவரங்காடு, வசந்த நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு பொதுமக்களி டம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ் விற்கு சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.மோகன் தலைமை வகித் தார். சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற் சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவை குற்றாலத்தில் குவிந்த கூட்டத்தை கட்டுப்படுத்த திடீரென ஒலித்த அபாய சங்கு

கோவை, மே 12- கோவை குற்றாலத்தில் திடீரென அபாய சங்கு ஒலித்த தால், சுற்றுலாப் பயணிகள் பதற்றமடைந்தனர். கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள  கோவை குற்றாலத்தில் ஞாயிறன்று விடுமுறை தினம் என்ப தால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்று லாப் பயணிகள் வசதிக்காக வனத்திற்குள் அழைத்துச் செல்ல  கூடுதல் வாகனங்களும் இயக்கப்பட்டன. அதிக அளவில் மக் கள் படையெடுத்த நிலையில் நீண்ட வரிசையில் பலரும் காத்திருந்து அருவியில் குளிக்க சென்றனர். குளிக்கும் இடத்திலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த  நிலையில் வெளியே இருக்கும் கூட்டத்தையும், மேற் கொண்டு ஒரே இடத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிவதை கட் டுப்படுத்தவும் வனத்துறை ஊழியர்களுக்கு சவால் ஏற்பட் டது.  இந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்தி, நெரிசலை தவிர்க்க வனத் துறையினர் அபாய சங்கை ஒலிக்க செய்தனர்.  தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் நெரிச லில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க அபாய சங்கு ஒலிக்கப் பட்ட நிலையில் பலரும் பதற்றம் அடைந்தனர். இதனை  அடுத்து விசில் அடிக்கும் ஒலிபெருக்கி மூலம் கூறியும் சுற்று லாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களை நீக்க மனு

ஈரோடு, மே 12- கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களை நீக்கும்  உயர் நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்த கோரி ஆட்சியர் அலுவ லகத்தில் மனு திராவிடர் தளம் அமைப்பினர் மனு அளித்த னர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திரா விடர் தளம் அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவினர் அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்கள், சங் கங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களில் உள்ள சாதி  மற்றும் சமூக அடையாளங்களை கட்டாயம் நீக்க வேண்டு மென்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 16 ஆம்  தேதி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள் ளது.  எனவே, ஜாதி ஒழிப்பு நோக்கில், இந்த நீதிமன்றத் தீர்ப்பை  நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கென சமூக நீதி கண் காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர்.

சிஐடியு நல வாரிய அலுவலகம் திறப்பு விழா

நாமக்கல், மே 12- எலச்சிபாளையத்தில் நல வாரிய அலுவலகம் மற்றும் தோழர் வி.பி. சிந் தன் நினைவக திறப்பு விழா திங்க ளன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, தனியார்  கட்டிடத்தில் தோழர் வி.பி.சிந்தன் நினை வகம் மற்றும் நல வாரிய அலுவலகம்  திறப்பு விழா சிஐடியு நாமக்கல் மாவட்ட  மோட்டார் இன்ஜினியரிங் தொழிலா ளர் சங்கம் சார்பில் திங்களன்று நடை பெற்றது.  இந்நிகழ்விற்கு, சங்க மாவட்டச் செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித் தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர். ரமேஷ் முன்னிலை வகித்தார். அட்மா சேர்மன் திமுக ஒன்றியச் செயலாளர் எம்.தங்கவேல் ரிப்பன் வெட்டி அலு வலகத்தை திறந்து வைத்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன் கணினியில் முதல் பதிவை துவக்கி  வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் ந.வேலுசாமி நலவாரிய அரசு நலத் திட்டங்கள் சம்பந்தமாக விளக்க உரை யாற்றினார்.  இதில், சிபிஎம் முன்னாள் ஒன்றி யச் செயலாளர் பி.சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, கிட்டு சாமி, ஈஸ்வரன், விஜய், ராஜி, மூத்த தோழர் பெரியசாமி, கொன்னையார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் துரைசாமி, உஞ்சனை முன்னாள் ஒன் றியக் கவுன்சிலர் தங்கராஜ், திமுக ஒன் றியப் பொருளாளர் லட்சுமணன், இளை ஞர் அணி அமைப்பாளர் முருகானந் தம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு உதகை,

மே 12- உதகை அருகே தொறையாட்டி கிராமத்தில் அரசு மது பான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே அமைந்துள்ள எப்ப நாடு ஊராட்சிக்குட்பட்ட தொரையாட்டி கிராமத்தில் அரசு மது பான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை  தீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்த னர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எப்பநாடு, கட நாடு, தூனேரி ஆகிய மூன்று ஊராட்சிகளின் கீழ் 25க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராமப் பகுதியில் செயல் படும் அரசு மதுபான கடையால், தோட்டப் பணிகளுக்கு செல் லும் பெண்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லூரி களுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங் களில் ஈடுபட்டதையடுத்து அரசு மதுபான கடை அப் புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கிராமப் பகுதி யில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள்  நடைபெற்று வருவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம  மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வாஸன் கண் மருத்துவமனை திறப்பு விழா

பொள்ளாச்சி, மே 12- பொள்ளாச்சியில் புதுப்பொழிவுடன் மேம்படுத்தப்பட்ட வாஸன் கண் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இயங்கிக் கொண் டிருக்கும் வாஸன் கண் மருத்துவமனை, தரம் உயர்த்தப் பட்டு உலகத் தரமான மருத்துவர்கள் மற்றும் அதிநவீன மருத் துவ கருவிகளுடன் கூடிய மருத்துவ சேவை புதுப்பொழி வுடன் திங்களன்று தொடங்கப்பட்டது.  பொள்ளாச்சி வாஸன் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக சிவா மெட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் மருத்து வர் பி.உத்ரராஜ் மற்றும் விஜய் டிவி புகழ், கேபிஒய் பாலா பங் கேற்று, சேவையை துவக்கிவைத்து உரையாற்றினர். இதில்,  பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் எம். கணே சன், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவர் எஸ். வெங்க டேஷ், பொள்ளாச்சி சுன்னத் ஜமாத் தக்னியா ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.ஒய். ஜாகிர் உசேன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கோவை வாஸன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் மற்றும் கண் விழித்திரை அறுவை சிகிச்சை நிபு ணருமான, எய்ம்ஸில் தங்கப் பதக்கம் பெற்ற டாக்டர் அனுஷா வெங்கட்ராமன் மற்றும் வாஸன் கண் மருத்துவ மனையின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.