பல்லடம் அரசு மருத்துவமனையில் செல்போன் லைட்டில் மருத்துவம்
பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக் கப்பட்டதால் செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த காணொளி திங்களன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பல்ல டம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங் கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப் பட்டார். இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால், செல்போன் லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கும் அவலம் ஏற்பட் டது. இதைதொடர்ந்து மின்சார வசதி இல்லாமல் நோயாளி ஒருவருக்கு செல்போன் லைட் உதவியுடன் மருத்துவம் பார்க் கப்பட்ட காணொளி செவ்வாயன்று சமூக வளைதங்களில் வெளியாகியுள்ளது பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசா ரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் திட்ட இணை இயக்கு நர் தெரிவித்துள்ளார்.
உடுமலையில் விளையாட்டு போட்டிகள்
உடுமலையில் ஏப்.21 மற்றும் ஏப்.22 ஆகிய இரு தினங்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்க ழகத்தின் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையேயான டேபிள் டென் னிஸ், கேரம் மற்றும் சதுரங்க போட்டிகள் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தில் ஏப்.21 மற்றும் ஏப்.22 ஆகிய இரு தினங்கள் நடைபெற் றது. இந்த போட்டிகளில் 9 கல்லூரிகளில் இருந்து 122 மாண வர்கள் கலந்து கொண்டார்கள். இப்போட்டிகளை உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மணிவண்ணன் துவக்கி வைத்தார். மேலும் தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பொன்னுதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நிறைவு விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட தலைமை வன பாதுகாவலர் கணேஷ் குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில், டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் பெண்கள் பிரிவில் தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல் இடம் பிடித்தனர். கேரம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல் இடம் பிடித்தனர். சதுரங்கத்தில் ஆண்கள் பிரிவில் கொடுவள்ளி உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல் இடம் பிடித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்
திருப்பூர் ஏப்.22- மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில் களப்ப ணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கப்படாமல் இருந்தால், https:tnrights.tnega.org/registration/ என்ற இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்தி றனாளிகள் நலனுக்காக உரிமைகள் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் மாற் றுத்திறனாளிகளின் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கு பிரத் யேக செயலி உருவாக்கப்பட்டு அச்செயலியில் புள்ளிவிவ ரங்கள் சேகரிக்கப்படுகிறது. இப்பணி மகளிர் திட்ட ஊரக வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய களப்பணியாளர்கள் ஆகியோர் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக் கெடுப்பு பணி 2023 ஆம் ஆண்டு நவ.29 முதல் நடை பெற்று கடந்த 2024 செப்.30 அன்று முடிவடைந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில் தங்களது விவரங்கள் களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கப்படா மல் இருந்தால், விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் https:tnrigh ts.tnega.org/registration/ (New Incognito Window (ctrl+shift=N) மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்) என்ற இணையதளத்தை பயன்படுத்தி விவரங்களை சுயமாக பதிவு செய்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார்.