மாமேதை கார்ல் மார்க்ஸ்-சின் பிறந்தநாள் விழா
கோவை, மே 5- மாமேதை காரல் மார்க்ஸ்-சின் 207 ஆவது பிறந்தநாள் விழா திங்களன்று கொண்டாடப்பட்டது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தத் துவ ஆசான். கனவுகளுக்குப் பதிலாக அறிவியலையும், கண்ணீருக்குப் பதி லாக புரட்சியையும் முன்வைத்த புரட்சி யாளர் மாமேதை கார்ல் மார்க்ஸ் 207 ஆவது பிறந்த தினம் திங்களன்று உலகம் முழுவதும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக் குழு அலுவலகத் தில் மார்க்ஸ் பிறந்த நாள் விழா மற்றும் “கார்ல் மார்க்ஸ் பிறந்தார்” என்ற தலைப் பில் தத்துவார்த்த அமர்வு மார்க்சிஸ்ட் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, மாவட்டக் குழு உறுப் பினர் ஆர்.கோபால் சங்கர் தலைமை வகித்தார். எழுத்தாளர் இரா.முருக வேள் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் கே.அஜய் குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப் பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் கார்ல் மார்க்ஸ் யின் உருவப் படத்திற்கு, மாலை அணி வித்து மரியாதை செய்தனர். இதேபோன்று, கோவை மாநகர கிழக்கு நகர குழுவின் 64 ஆவது வட்டம் புலியகுளத்தில் எழுச்சிகரமான காரல் மார்க்ஸ் பிறந்த தினம் கொண் டாடப்பட்டது. மேட்டுப்பாளையம் தாலுகா கமிட்டி சார்பில் சிறுமுகை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. எஸ்.கனகராஜ், தாலுகா செயலாளர் கே.கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் சார்பில் காரல் மார்க்ஸ் பிறந்ததினம் மற்றும் மின் ஊழி யர் மத்திய அமைப்பின் ஸ்தாபனத் தலை வர் பி.சி. வேலாயுதம் நினைவு தினம் ஆகிய நிகழ்வு நடைபெற்றது. கோவை டாடாபாத் தலைமை பொறியாளர் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந் நிகழ்வில், மின் ஊழியர் மத்திய அமைப் பின் மண்டலச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பி னர் டி. பழனிச்சாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு, அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார் பில் காரல் மார்க்ஸ் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில், அகில இந் திய வழக்கறிஞர் சங்க மாநிலப் பொரு ளாளர் மாசேதுங், மாவட்டச் செயலா ளர் ஜோதிகுமார் மற்றும் ஆர்.கோ பால்சங்கர், சா.பாலமுருகன், ஆர்தர் குமார், வெண்மணி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வார்டு பகுதிக்குட்பட்ட கே.துரைராஜ் நகர் மற் றும் வெண்டிபாளையத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காரல் மார்க்ஸ் படத்திற்கு, மாலை அணி வித்து மரியாதை செய்தனர். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராஜா, நிர் வாகிகள் சி.வீரபாண்டியன், ஆர்.மாரி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ்-சின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து கொண் டாடப்பட்டது. கிழக்கு மாநகரச் செயலா ளர் கே. பச்சமுத்து தலைமையில் நடை பெற்ற விழாவில் அலுவலக செயலா ளர் பி. சந்திரன் காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்து கண்ணன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அமைப்புக்குழு உறுப்பி னர் ஏ. முருகேசன், மேற்கு மாநகரச் செய லாளர் கணேசன், வடக்கு மாநகரச் செய லாளர் பிரவீன் குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி, மாணவர் சங்க நிர்வாகிகள் கோகுல், டார்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். தருமபுரி தருமபுரி செங்கொடி புரத்தில் கார்ல் மார்க்ஸ்-சின் உருவப் படத் துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசு பாலன், மூத்க தலைவர் பி. இளம் பரிதி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம். மாரிமுத்து சோ. அருச்சுனன், ஜி. சக்திவேல், ஆர்.மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லை யன், கே.பூபதி மற்றும் கார்த்திக், கார்த்திகேயன் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.