tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கோடை விடுமுறையை ஒட்டி மாணவர்களுக்கு கலை பயிற்சி

திருப்பூர், மே 6 - திருப்பூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில் திருப்பூர் மண்ணரை, கருமாரம்பாளையம் நகரவை நடுநி லைப் பள்ளியில் மே 2 முதல் 12ஆம் தேதி வரை கலை பயிற்சி  அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக இருக்கும் வகையில் மேற்படி நாட்களில் தினமும் காலை  10.00 மணி முதல் 12.00 மணி வரை யோகா, பரத நாட்டியம், குர லிசை, ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகி றது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கு  பெறலாம். ஏற்கெனவே வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 3.00 மணி  முதல் 5.00 மணி வரை மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை  10.00 மணி முதல் 12.00 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு  வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு 96779 65555 அலைபேசி  எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிந்தவுடன் நிறைவு நாளன்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்படும். இவ்வாய்ப்பை மாணவர்கள் பயன்ப டுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறி யிருக்கிறார்.

காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, மே 6 - விவசாய விளைநிலங்களை தேசப் படுத்தி வந்த காட்டு விலங்குகள் தற் போது விவசாயிகளையும் தாக்கி வருகி றது. எனவே விவசாயிகளின் பயத்தை  போக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.   மலைப்பகுதியில் வறட்சி ஏற்பட் டுள்ள நிலையில் உணவு மற்றும் குடி நீர் தேவைகளுக்காக மலை அடிவார பகுதியில் காட்டு விலங்குகள் கூடாரம்  இட்டுள்ளது. மேலும், சில வாரங்களாக  காட்டு யானைகள் தென்னை மரங்களை  சேதப்படுத்தி வருவது இப்பகுதி விவசா யிகளை கவலை அடையச் செய்துள் ளது. குறிப்பாக மலை அடிவார பகுதி யான ஜல்லிபட்டி, கொங்குரார் குட்டை,  பொன்னாலம்மன் சோலை, அமராவதி  மற்றும் கல்லாபுரம் ஆகிய பகுதி விவ சாய நிலங்களில் இருக்கும் தென்னை  மரங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில்  உள்ள குழாய்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. ஏற்கனவே காட்டு பன்றிகள் மலை அடிவார பகுதி யில் இருந்து பல கிலோ மீட்டர் தொலை வில் இருக்கும் குடிமங்கலம் ஒன்றியப் பகுதி விளைநிலைங்கள் மற்றும் விவசா யிகளை தாக்கி வருவது முடிவுக்கு வராத நிலையில், தற்பொழுது காட்டு யானைகளும் விளைநிலங்களை சேதப் படுத்தி வருகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், கோடை காலம் தொடங்கிய நிலை யில் காட்டு பகுதியில் உள்ள விலங்கு கள் விளை நிலங்களுக்கு வர தொடங்கி  உள்ளன. வனத்துறையினர் காட்டு பகு தியில் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கவும், மலைப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வரமுடி யாத வகையில் மலையடிவார பகுதி யில் தடுப்பு வேலி அல்லது அகழிகள் அமைக்க வேண்டும். விலங்குகள் விளைநிலங்களுக்கு வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன விலங்குகளால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் மற்றும் விளை பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். 

உடுமலை – மூணாறு சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை

உடுமலை, மே 6 - உடுமலை – மூணாறு சாலையில் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதால், வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையை  விரிவாக்கம் செய்ய வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோருகின்றனர்.  தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான உடுமலை 9/6 செக்போஸ்ட் பகுதியில்  இருந்து சின்னாறு வரை மலைப்பகுதி யில் செல்லும் சாலைகளில், காட்டு  யானைகள் உணவு மற்றும் தண்ணீர்  பருகச் செல்வது வழக்கம். இந்நிலை யில் குறுகிய சாலை பகுதியாக உள்ள இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும், வனத்துறையினர் எந்த நட வடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.  இது குறித்து வாகன ஓட்டிகள் கூறு கையில், உடுமலை 9/6  செக்போஸ்ட்  பகுதியில் இருந்து சின்னாறு வரை  எட்டு கிலோ மீட்டர்  தூரம் மலைப்பகு தியில் சொல்லும் சாலை, ஒரு வாகனம்  மட்டும் செல்லும் வகையில் உள்ளது.  இந்த சிறிய சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும், சாலைகளின் இருபு றமும் குழியாகி உள்ளதால், மழை  பெய்திருக்கும் நிலையில் வாகனங் களை சாலையில் இருந்து இறக்கி ஓட்ட  முடியாது. மேலும், காட்டு யானைகள்  உணவு தேவைக்காக சாலைகளை கடந்து செல்லும் போது, வாகனங்களை  திருப்ப முடியாமல் அங்கேயே பயத்து டன் நிற்க வேண்டி உள்ளது என்றனர். உடுமலை மூணாறு செல்லும் மிக  முக்கிய சாலை வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. இதை  உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர்.