விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
00 நாள் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண்டும், என வலி யுறுத்தி, விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறு தித்திட்டத்தில் பணியாற்றிய தொழிலா ளர்களுக்கு சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண்டும், என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் நிர்வாகி எம்.ரங்கசாமி தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.கே.சேகர், மாநிலக்குழு உறுப்பினர் வி.தங்கவேல், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.பெருமா, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலா ளர் கந்தன், விவசாயிகள் சங்க செயலா ளர் ராமசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.