tamilnadu

img

ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கண்காணிப்பு தீவிரம்!

ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலிகோவை, அக்.19- கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள பன்றி  வளர்ப்பு பண்ணைகள் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமி ழக - கேரளா எல்லையில் தீவிர கண் காணிப்பு நடைபெற்று வருகிறது கேரளம் மாநிலம், திருச்சூர் மற் றும் கோட்டயம் உள்ளிட்ட பகுதிக ளில் வளர்ப்பு பன்றிகளுக்கு ஆப்பிரிக் கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள் ளது. மேலும், முதுமலை வனப்பகுதி யில் உள்ள காட்டுப்பன்றிகளுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிலையில், கோவையில் இந்த வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க மாவட்ட நிர் வாகம் மற்றும் கால்நடைத்துறை சார் பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை – கேரளம் மாநிலம் எல்லைகளான வேலந்தாவளம், வாளையார், முள்ளி உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கேரளாவிலிருந்து பன்றி இறைச்சி மற் றும் பன்றி தீவனம் ஏற்றி வரும் வாக னங்களை திருப்பி அனுப்ப அறிவு றுத்தப்பட்டுள்ளது. கோவை வழியாக கேரளம் பன்றி பண்ணைகளுக்கு தீவ னம் உள்ளிட்டவற்றை ஏற்றி சென்று விட்டு திரும்பி வரும் வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளுக்கும் தீவிரமாக கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கால்நடைத்துறை அதி காரிகள் கூறுகையில், கேரளம் மற்றும்  முதுமலையில் ஆப்பிரிக்கன் பன்றிக்  காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள் ளது. கோவையில் தற்பொழுது வரை அதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் எது வும் இல்லை. இருப்பினும் தொண்டா முத்தூர் உட்பட சில இடங்களில் செயல் பட்டு வரும் பன்றி வளர்ப்பு பண்ணை களை கண்காணித்து வருகிறோம். தற் பொழுது பரவுவது ஏ.எஸ்.எப் வகை  பன்றி காய்ச்சல் ஆகும். எனவே  வளர்ப்புப் பன்றிகளில் ஏதாவது மாற்றங் கள் தெரிந்தால் உடனடியாக கால் நடைத் துறைக்கு தகவல் அளிக்கும்படி  பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்: கண்காணிப்பு தீவிரம்!