tamilnadu

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை'

தேர்ச்சி விகிதத்தில் நாமக்கல் தொடர்ந்து சரிவு

நாமக்கல், மே 9- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டம் 15 ஆவது இடத் திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கல் வித்துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வியாழனன்று வெளி யானது. நாமக்கல் மாவட்டத்தில் 195 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8,913 மாணவர்கள், 9,116 மாண விகள் என மொத்தம் 17,929 பேர் தேர்வு  எழுதினர். இதில் 8,312 மாணவர்கள், 8,840 மாணவிகள் என மொத்தம் 17,152 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி  சதவிகிதம் 95.67 ஆகும். கடந்த 2023 ஆம்  ஆண்டு மாநில அளவில் 9 ஆம் இடம், 2024 ஆம் ஆண்டு 10 ஆம் இடம் பிடித்த நிலையில், தற்போது 15 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பத்து ஆண்டு களுக்கு முன்பு 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வுகளில் நாமக்கல் மாவட்டம் முதல் மூன்று இடங்களை பிடித்து வந்தது.  ஆனால், நாளடை வில் படிப்படியாக தேர்ச்சி சதவிகிதம் குறைய தொடங்கியது. மாவட்ட ஆட்சி யர், கல்வித்துறை அதிகாரிகளிடம்  ஆலோசனை நடத்தியபோதும் தேர்ச்சி  சதவீதம் உயரவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கள் கூறுகையில், கடந்தாண்டு மாணவர் கள் 700க்கும் மேற்பட்டோர் பள்ளியை விட்டு இடையே நின்றுவிட்டனர். அது மட்டுமின்றி, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், அந்த தோல்வி பாடத்தை அடுத்த சில மாதங்களுக்குள் எழுத வேண்டும். அதி லும் வெற்றி பெறாவிட்டால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பாக எழுத வேண்டும். இடைநின்ற மாணவர் களை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து தேர்வில் பங்கேற்க செய்தோம். இவ்வாறான சூழலால் தேர்ச்சி சதவிகி தம் குறைந்துள்ளது, என்றனர். நாமக்கல் ஆட்சியர் அலுவல கத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு களை வெளியிட்ட பிறகு ஆட்சியர் ச.உமா செய்தியாளர்களிடம் பேசுகை யில், கடந்தாண்டை காட்டிலும் இந் தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 0.3 சத வீதம் குறைந்துள்ளோம். 10 ஆவது இடத்தில் இருந்து 15 ஆம் இடத்துக்கு மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது. கடந் தாண்டு தேர்வு எழுதியோரின் மொத்த  எண்ணிக்கை 17,260. இந்த ஆண்டில் 17,929 பேர் தேர்வு எழுதினர். பள்ளியை விட்டு இடைநின்றவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், பள்ளிக்கு சரிவர வரா மல் இருந்தோர் என 720 மாணவ, மாண விகளை அழைத்து வந்து தேர்வு  எழுத வைத்தது மட்டுமே மகிழ்ச்சிய ளிக்கிறது. தேர்ச்சி விகிதம் குறைவு  குறித்து கல்வித்துறை அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும், என்றார்.