போக்குவரத்து விதிகளை மீறியதாக பணம் பறிக்கும் புதுவித மோசடி
கோவை, மே 10- போக்குவரத்து விதிகளை மீறி யதாக வாகனத்தின் புகைப்படத்து டன் லிங்க் அனுப்பி, பணம் பறிக்கும் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வரு கிறது. எனவே பொதுமக்கள் எச்ச ரிக்கையுடன் இருக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தகவல் தொழில் நுட்பம் வேக மாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை பயன்படுத்தி ஒருபுறம் வித விதமான மோசடியும் அரங் கேறி வருகின்றது. வங்கியில் இருந்து பேசுகிறோம், மானியத்தில் கடன் வாங்கித் தருகிறோம், சிபிஐ அதிகாரி என்று கூறி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்பொழுது புது வித மாக ஒரு மோசடி சேர்ந்துள்ளது. அதாவது போக்குவரத்து விதி களை மீறியதாக நமது செல் போனுக்கு புகைப்படத்துடன் லிங்கை அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்புகின்றனர். அது ஏதோ? நாம் போக்குவரத்து விதி களை மீறியதற்காக காவல் துறையி னர் அனுப்பிய புகைப்படம் என்று கருதி அந்த லிங்கில் அபராத தொகையை செலுத்தும் நோக்கில் விவரங்களை பதிவு செய்யும் நப ரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி கும்பலைச் சேர்ந் தவர்கள் அபகரித்து விடுகின்றனர். இது குறித்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் கூறுகை யில், குற்றச் செயல்களை தடுக்க சிக்னல்களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் விதிகளை மீறும் வாகனங் களை கண்காணித்து காவல் துறை யினர் அபராதம் விதிக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபரின் செல் போனுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். அதில் எந்த பகுதியில் போக்குவரத்து விதி மீறல் நடைபெற்றது என்று புகைப்படமும் இருக்கும், அபராத தொகை எவ்வளவு? என்பதை எம்- பரிவாகன் என்ற செயலுக்குள் சென்று வாகனத்தின் எண்ணை பதிவு செய்தால் தெரிந்து விடும். இதேபோல் போக்குவரத்து விதிகளை மீறியதாக, புகைப்படத் துடன் லிங்க் அனுப்பி அடையாளம் தெரியாத நபர்கள் புதுவிதமாக மோசடி செய்து பணத்தை பறிக் கின்றனர். அதாவது போக்குவ ரத்து விதியை மீறியதாக புகைப்ப டம் அபராதத் தொகை அதை செலுத்த லிங்குடன் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வரும். அதை பார்க்கும் நபர் நாம் தான் போக்கு வரத்து விதியை மீறி இருக்கிறோம் என்று நினைத்து அந்த லிங்க்குள் சென்று அபராதத் தொகையை செலுத்த முயற்சி செய்தால் ஆதார் எண், பான் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கும். அதை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கு எண் ஆதார் மற் றும் பான் கார்டு எண் ஆகியவை உடனடியாக மோசடி நபர்களுக்கு கிடைத்துவிடும், அதை வைத்து சம் பந்தப்பட்ட நபரின் வங்கி கணக் கில் இருக்கும் பணத்தை மோசடி ஆசாமிகள் அபகரித்து விடுவார் கள். பொதுவாக காவல் துறையி னர் அனுப்பும் தகவல் எந்த லிங்க் கும் இருக்காது. எம் -பரிவாகன் செயலி மூலமோ அல்லது காவல் துறையினர் வெப்சைட் மூலமாக தான் அபராதத்தை செலுத்த முடி யும். ஆனால் இந்த கும்பல் அனுப் பும் குறுஞ்செய்தியில் லிங்க் இருக் கும். அதை திறந்து விவரங்களை பதிவு செய்யக்கூடாது; மீறி அந்த லிங்கை தொட்டு தகவல்களை பதிவு செய்தால் பணத்தை இழந்துவிடும் அபாயம் ஏற்படும். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் அந்த கும்பல் ரூபாய் ஐம்பதாயிரம் மோசடி செய்து உள்ளனர். மேலும் ஐந்து பேரிடம் மோசடி நடந்து உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை மீறியதாக, செல்போனுக்கு புகைப்படத்துடன் லிங்க் வந்தால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து விதி களை மீறும் வாகனங்கள் புகைப்ப டம் மோசடி ஆசாமிகளுக்கு எப்படி? கிடைக்கிறது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.