வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
கோவை, மே 15- கரடிமடையில் ஒற் றைக் காட்டு யானை, வாழை தோட்டத்திற்குள் புகுந்து மரங்களை சேதப் படுத்தியதால் விவசாயி கள் கவலையடைந்துள்ள னர். கோவை மாவட்டம், கரடிமடை பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டம் உள்ளது. அங்கு வனவிலங்குகள் வருவதை தடுக்க சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கரடி மடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் தற்பொழுது உணவு, தண்ணீர் தேடி சுற்றி வருகிறது. இந்நிலையில், புதனன்று இரவு ஜெயராஜன் வாழை தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை சேதப்படுத்தி உள் ளது. இதில், 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்து உள்ளன. சம்பவம் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. விளை பொருட்கள் சேதமடைந்ததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவ சாய நிலங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருவதாகவும், வனத் துறையினர் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள் இல்லத்தில் பணி வாய்ப்பு
ஈரோடு, மே 15- ஈரோடு அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத் தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடம் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன் கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் 36 அரசு குழந்தைகள் இல்லங்கள் இயங்குகிறது. இவற்றில் தங்க வைக்கப்படும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படை யில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆணை யிடப்பட்டுள்ளது. எனவே ஈரோடு அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள ஒரு ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட வுள்ளது. இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப் படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம். இறுதி தேதி 23.5.2025 ஆகும். பெறப்படும் விண்ணப்பங்களை தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படும் ஆற்றுப் படுத்துநருக்கு போக்குவரத்து செலவு உட்பட மதிப்பூ தியம் (நாளொன்றுக்கு ரூ.1000/- வீதம் மாதத்திற்கு 9 நாட்கள் என ஆண்டு முழுவதும்) வழங்கப்படும். இப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. மேலும் விவ ரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லகத்தை தொடர்புக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை
தருமபுரி, மே 15- பென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. பென்னாகரம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ரவிகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலு தவிகள், தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது, தீய ணைப்பு நிலைய அலுவலர்கள் பேசுகையில், தருமபுரி மாவட்டத்திலுள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ.75.65 கோடியில் அவசர கால சிறிய மீட்பு ஊர்தி கள், தண்ணீர் லாரிகள், உயரழுத்த நீர் தாங்கும் வண்டி கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப் பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் ஏதேனும் அசம்பா விதங்கள் நிகழ்ந்தால் தீயணைப்பு நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும், என்றனர்.
போதையில் காவல் நிலையம் முன்பு ரகளை
நாமக்கல், மே 15- குமாரபாளையத்தில் போதையில் இருசக்கர வாக னம் ஓட்டிய இருவர், காவல் நிலையம் முன்பு ரகளை யில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள பிரிவில், இரண்டு சக்கர வாக னத்தில் வந்தவர் மீது, எதிரே குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மோதியதில், நிலை தடுமாறி விழுந்தனர். காவல் நிலையம் முன்பு நடந்த தால், போலீசார் விரைந்து வந்து கீழே விழுந்தவர் களை ஓரமாக நிற்க வைத்து விசாரணை மேற்கொண்ட னர். அவர்களிடம் பெயரை கேட்டபொழுது சொல்ல மறுத்ததுடன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இத னால் அவர்கள் வந்த இரண்டு சக்கர வாகனத்தை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதனால் குடிபோதையில் இருந்து இருவரும் அருகில் இருந்த கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் ஒன்றும், சாணிப் பவுடரையும் வாங்கி வந்து, காவல் நிலையம் முன்பு நின்று கொண்டு, ‘வாக னத்தை கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வோம்’ எனக்கூறி, வாயில் சாணிப் பவுடரை போட்டு தண்ணீரை குடித்தனர். அதனை அவர்களே செல்பி எடுத்து தாங்கள் தற்கொலைக்கு காவல் துறை தான் காரணம் என பதிவு செய்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குமாரபாளையம் போலீசார் அவர்கள் இருவரையும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.