tamilnadu

img

ஒரே நாளில் 609 நாய்களுக்கு கருத்தடை

ஒரே நாளில் 609 நாய்களுக்கு கருத்தடை

நாமக்கல், மார்ச் 28- நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வியாழனன்று ஒரே  நாளில் 609 தெருநாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப் பட்டது. நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. சாலைகளிலும், தெருக்களிலும் சுற் றித்திரியும் நாய்களைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. நாய் கடிகளால் அரசு மருத்துவமனைக்கு செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நாமக்கல் மாநகராட்சி ஆணையர் ரா.மகேஸ் வரி உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி தலை மையிலான குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் உதவியு டன் வியாழனன்று களத்தில் இறங்கினர். ஒரே நாளில் மாநக ராட்சி பகுதிகளில் 609 நாய்களைப் பிடித்து வந்து, நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிட அறையில் அவற் றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று விட்டனர்.