தெருநாய் கடித்ததில் 5 பேருக்கு காயம்
திருச்செங்கோடு அருகே தெருநாய் கடித்ததில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தெருநாய்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், கூட்டாக சேர்ந்து கொண்டு பொது மக்களை அச்சுறுத்துவது, கடிப்பது போன்ற செயல்பாடுகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு அருகே உள்ள சூரி யம்பாளையம் பகுதியில் வியாழனன்று மாலை தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்த ஐந்து பேரை தெரு நாய் ஒன்று கடித் துக் குதறியது. இதில் சூரியம்பாளையம் பகு தியைச் சேர்ந்த சதீஷ் (40), தறித்தொழிலாளி வாசுகி (56), தமிழ்செல்வி (63), பள்ளிக்குச் சென்று வந்த ருத்ரா (9), குமரன் (7) ஆகி யோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து நாயை விரட்டிய அக்கம் பக்கத்தினர், காய மடைந்தவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருச்செங்கோடு நகரப் பகுதி முழுவதும் தெருநாய் நடமாட்டம் அதிக மாக இருப்பதால், அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.