மின்சார பேருந்து தனியார்மயத்தை எதிர்த்து 5 நாள் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நிறைவு
சென்னை, மே 18 - மின்சார பேருந்துகளை (இ-பஸ்) தனியார்மய மாக்கும் மாநில அரசின் நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து 5 நாட்கள் நடைபெற்ற பிரச்சாரம் வெள்ளியன்று (மே 16) நிறைவடைந்தது. உலக வங்கி நிதி உதவி யோடு தமிழ்நாடு அரசு 1000 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. முதற்கட்டமாக ஜூன் முதல் 650 மின்சாரப் பேருந்துகள் (ஏசி/நான் ஏசி) வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, மத்திய பணி மனை, பெரும்பாக்கம் ஆகிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளை தனி யார் நிறுவனம்மூலம் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர், பராமரிப்பா ளர் உள்ளிட்ட ஊழியர்க ளை தனியார் நிறுவனம் நியமித்துக் கொள்ளும். ஒப் பந்த தொழிலாளியாக நடத்து நரை மட்டும் அரசு நியமிக்கும். மின்சார பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக வசூல் வந்தால், நட்டத்தை அரசு ஈடுகட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மின்சார பேருந்து களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து மே 11 முதல் சிஐடியு, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர்சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தின. சென்னை நகரம் முழு வதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறை வாக ஆங்காங்கே பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. மின்சார பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகமே இயக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரந் தரப்பணி அடிப்படையிலும், 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் நிரப்ப வேண் டும். இ-பேருந்து சேவையில் ஒப்பந்த முறை, தனியார்ம யத்தை கைவிட வேண் டும், போக்குவரத்து கழகங் கள் அரசு துறையாக நீடிப் பதை உறுதி செய்ய வேண் டும் என தலைவர்கள் வலி யுறுத்தினர்.