வன உயிரினப் பொருட்களை கடத்திய 4 பேர் கைது
கோவையில் சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள் கடத்திய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், ராம் நகர் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானை தந் தங்கள் கடத்துவதாக வனத் துறையின ருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்ப டையில் அப்பகுதியில் வாகன சோத னையில் விடுபட்டனர். அப்போது அவ் வழியாக மேட்டூரில் இருந்து வந்த டாடா நெக்ஸான் என்ற நான்கு சக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமார், கிருபா, விஜயன் மற்றும் கௌதம் ஆகிய 4 பேர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த வனத் துறையினர். அந்த நான்கு சக்கர வாக னத்தை சோதனை செய்தனர். அப்பொ ழுது அதில் யானை தந்தம், சிறுத்தை யின் பற்கள் மற்றும் நகங்கள் விற்க கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதனை கோவையில் விற்க கொண்டு வந்தது வனத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. கோவை மாவட்ட வனத்துறையினர், வன உயி ரின பொருட்களை பறிமுதல் செய்த னர். மேலும், வன குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
‘குழந்தை திருமணத்தை தடை செய்வோம்’ என்னும் விழிப் புணர்வு வாகனத்தினை, சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி திங்களன்று துவங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் பொன்மணி, குழந்தைகள் நலக்குழு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.