tamilnadu

img

கோனி தொகுதியில் சிபிஎம் வெற்றி தவறான பிரச்சாரம் செய்தவர்களை ஐயப்பன் தண்டித்து இருக்கிறார்...!

கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அதிரடி

திருவனந்தபுரம், நவ.9- “கேரள அரசு, கோயிலை விழுங்கி ஏப்பம் விடுபவர்களுக்கு ஆதரவாக இல்லையே தவிர, பக்தர்களுக்கு எப் போதும் ஆதரவாகவே உள்ளது” என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கட கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். கேரள தேவசம் போர்டு ஊழி யர்கள் சங்கத்தின் மாநில அலுவலக திறப்பு விழா, திருவனந்தபுரத்தில் நடை பெற்றது. அப்போது, இக்கருத்தை தெரிவித்த அமைச்சர் சுரேந்திரன், பின ராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுதான், தேவ சம் போர்டுகளுக்கு அதிகமான நிதியை ஒதுக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள் ளார்.

மேலும், “சபரிமலை பிரச்சனை யைப் பொறுத்தவரை, அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என் பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என் பதை புரியவைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது; தேவசம்போர்டு ஊழி யர்களும் பொய்ப் பிரச்சாரங்களின் பின்னால் சென்று விட்டார்கள்” என்று பேசியுள்ள சுரேந்திரன், ஆனால், தனது பெயரைப் பயன்படுத்தி தவறான பிரச் சாரம் செய்தவர்களுக்கு கோனி தொகு தியில் ஐயப்பன் தண்டனை வழங்கி யிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் மொத்தமுள்ள 20 நாடா ளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதி களை காங்கிரஸ் கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சிபிஎம் வெற்றி பெற்றது. அப்போது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனு மதித்த காரணத்திற்காகவே. சிபிஎம்-மை ஐயப்பன் தண்டித்து விட்டதாக கேரள எதிர்க்கட்சிகள் கூறின. இந்நிலையில், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில், சபரிமலை அமைந்துள்ள கோனி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரசிடமிருந்து சிபிஎம் கைப்பற்றி யது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளை ஐயப்பன் தண்டித்து விட்டதாக அமைச் சர் பேசியுள்ளார்.