சூலூர் ரயில்வே ரோடு தாலுகா நீதிமன்றத்திற்கு அருகில் விடு தலைப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் வெள்ளிவிழா பூங்கா அமைந்துள்ளது. இதில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் சூலூர், இருகூர், நீலம்பூர், பட்டணம், அரசூர், ராசிபாளையம் உள்ளிட்ட சுற்றுப் புற வட்டங்களை சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களும், அவர்களுக்கு அறிவித்த தண்டனைக் காலங்களும் இடம் பெற்றுள்ளன.