tamilnadu

img

இளைஞர் மர்ம மரணம் தனியார் நிறுவனத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம்

கோவை, செப். 23- கோவையில் இளைஞர் மர்ம  மரணத்திற்கு காரணமான தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவ மனையில் திங்களன்று இளைஞ ரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்டம், சவுரி பாளையத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவரின் மகன் சஞ்சீவி (23). இவர் ஒண்டிபுதூர் அருகே உள்ள ஜெயம் ஆட்டோ மொபைல் கம் பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலை யில் சமீபத்தில் சஞ்சீவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்திற்கு நிர்வாகத்தின் வேலைப்பளுவே காரணம் என  சஞ்சீவி குற்றம்சாட்டி யதால் நிர்வாகம் அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது.  இதையடுத்து கடந்த 20 ஆம்  தேதி சஞ்சீவியும், அவரது தாயார் அருள் மொழியும் வேலை தொடர் பாக பேச்சுவார்த்தை நடத்த ஜெயம் ஆட்டோ மொபைல் நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உள்ள னர். ஆனால் நிர்வாகத்தினர் இவர்களை சந்திக்க மறுத்து விட்ட னர்.  ஆனால், நிறுவன மேலாளரை எப்படியாவது சந்தித்து பேசி வரு வதாக சென்ற சஞ்சீவி ஞாயிறன்று அருகிலுள்ள வாளாங்குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து பந்தய சாலை காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர்.   இதைத்தொடர்ந்து சஞ்சீவின்  மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது இறப்பை கொலை வழக் காக பதிவு செய்யக்கோரி அவரது உறவினர்கள் திங்களன்று கோவை அரசு மருத்துவமனை பிரேத பரி சோதனை கிடங்கிற்கு முன்பு முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த் தையில் காவல்துறையினர் உடற் கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் போராட் டத்தை கைவிட்டனர்.