tamilnadu

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

நாமக்கல், செப்.27- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதி யை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவருடைய மகன் தேவேந்திரன் (27). இவர் பிரபல தனியார் செல் போன் நிறுவனத்தில் டவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் புதனன்று தேவேந்திரன் தனது வீட்டில் செல் போனை சார்ஜர் போட்டுக் கொண்டு, அதை பார்த்துக் கொண்டும் இருந்தார். அப் போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தேவேந்திரன் மீது  மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படு காயமடைந்து அவர் பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளி பாளையம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;