சேலம்,செப்.22- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ரத்ததான கழகம் மற்றும் விஜய், அஜித் சூர்யா ரசிகர்கள் இணைந்து சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நெல்லை அசோக் மற்றும் மா.வாசு தேவன் நினைவாக சேலத்தில் ரத்ததான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த ரத்த தான முகாம் சேலம் மாநகர் வடக்கு சின்னேரிவயல் கிளை சார்பில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சமூக சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது. 1988 ஆம் ஆண்டு முதல் ரத்த தான கழகம் அமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் ரத்தத்தை கொடையாக வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் சின்னேரி வயக்காடு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விஜய், அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து வாலிபர் சங்க கிளை தலைவர் எம்.வினோத் தலைமை யில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. கிளை செயலா ளர் ஆர்.குரு பிரசன்னா வரவேற் புரையாற்றினார். முகாமை வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், மாநிலக்குழு உறுப்பினர் எம். கற்பகம், வாலிபர் சங்கம் வாலி பர் சங்கத்தின் மலைவாழ் இளை ஞர் சங்க மாநில செயலாளர் என். பிரவீன்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் ஆர். ரவீந்திரன், சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தமிழன் பார்த்திபன், வாலிபர் சங்க வடக்கு மாநகரத் தலைவர் பி.சதீஷ் குமார், மாநகர செயலாளர் ஆர்.வி.கதிர்வேல் உள்ளிட்டு திரளான இளைஞர்கள் ரத்த தானம் வழங் கினர். இந்நிகழ்சியில் பங்கேற்ற வர்களுக்கு வாலிபர் சங்கம் சார் பில் மரக்கன்றுகள் வழங்கப்பட் டது.