tamilnadu

அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், மே11-மத்திய அரசு நடத்தும் அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தொழிற் பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற் பிரிவில் பயின்று தேசியச் சான்றிதழ் பெற்று, அதே பிரிவில் தனி நபராக மே 29 முதல் ஜூன் 14 வரை நடைபெற உள்ள 109 ஆவது அகில இந்திய தொழில் பழகுநர் தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம். இதில் ஐடிஐ படித்து தேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், தொழில் பழகுநர் சட்டம் 1961 கீழ் தொழில் பழகுநர் பயிற்சியை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழில் பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் நேரடிப் பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள், மத்திய அரசின் தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால் தனி விண்ணப்பதாரராக மத்திய அரசு நடத்தும் தொழில் பழகுநர் தேர்வில் கலந்து கொள்ளலாம்.இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரிடம் இருந்து பெற்று தாங்கள் பணிபுரியும் நிறுவனம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.