tamilnadu

img

இந்திய மாணவர் சங்கத்தின் பொன் விழா ஆண்டு

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா 

நாமக்கல், நவ.28- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றி யத்தில் இந்திய மாணவர்  சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழாவை முன் னிட்டு வியாழனன்று அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம்  1970 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. மாணவர் சங்கத் தின்  பொன்விழாவை யொட்டி,  பள்ளிபாளையம் வண்ணாம் பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் வளாகத்தில்  மரக்கன்று  நடும் விழா நடை பெற்றது. இந்த விழாவிற்கு மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட துணை செய லாளர் தங்கமணி தலைமை வகித்தார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பள்ளி பாளையம் ஒன்றிய துணைத் தலைவர் பூபாலன், ஒன்றிய துணை செயலாளர் நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

;