tamilnadu

img

வாலிபர் சங்கம் சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பு இயக்கம்

கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி

 சேலம், அக்.10- கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தவும், இதுகுறித்து வலியுறுத்திய அறிஞர்கள், எழுத் தாளர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட 49 பேர்  மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்ப பெற  வலியுறுத்தி  பிரதமர் மோடிக்கு இந்திய ஜன நாயக வாலிபர்சங்கம் சார்பில்  கடிதம் அனுப்பும் போராட்டம்  வியாழனன்று சேலத்தில் நடை பெற்றது. வடமாநிலங்களில் மாட்டுக் கறி, ஜெய்ஸ்ரீராம் ஆகியவற்றை முன்வைத்து நடைபெற்ற கும்பல்  வன்முறை மற்றும் கொலை களை தடுத்து நிறுத்த வலியுறுத்து மாறு இந்திய பிரதமர்  மோடிக்கு, வரலாற்றாசிரியர் ராம சந்திர குஹா,திரைப்பட இயக்குனர் மணிரத்னம், அடூர்  கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் பகிரங்க மாக கடிதம் எழுதினர். இவர்கள் மீது பீகார் மாநிலம் முஜாபர்பூரை சேர்ந்த வழக்கறிஞர்  அளித்த புகாரின் பேரில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப் பட்டன. இதனை நாடு முழுவதும்  ஜனநாயக அமைப்புகள் கண்டித் துள்ளது. இந்நிலையில் தேசத் துரோக வழக்கை திரும்ப பெற  வலியுறுத்தி இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் சார்பில் பிரதம ருக்கு கடிதம் அனுப்பும் போராட் டம் நடைபெற்றது.   சேலம் வடக்கு மாநகர் பெரமனூர் கிளை சார்பில் பொது மக்களிடம் முகவரியுடன் தபால் அனுப்பும் இயக்கம் நடை பெற்றது. இதில் வடக்கு மாநகர் துணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கிளை நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.