உடுமலை, ஜூன் 10- உடுமலை ஜெயின் இரிகேசன் நிறுவனத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக சம்பள உயர்வு வழங் காததை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா ஏலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் என்ற விவசாய பொருள்கள் உற்பத்தி மற்றும் பழ ரசம் தயாரிக்கும் நிறுவனம் உள் ளது. இந்த நிறுவனத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு பணியாற்றும் தொழிலாளர் களுக்கு தொழிலாளர் நல சட்டங் கள் எதுவும் முறையாக அமல்படுத் தப்படாததுடன், கடந்த ஒன்றரை வருடங்களாக சம்பள உயர்வு வழங் கப்படவில்லை. மேலும், இரண்டு மாத சம்பளம் இன்று வரை வழங் காமல் உள்ளார்கள். இது போன்ற தொழிலாளர்க ளின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக நிர்வாகத்துடன் பேச, தொழிற்சங்கத்தின் தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மல் நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் திங்களன்று பணிகளை புறக் கணித்து உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நிறுவனத்தில் பெரும் பரபரப் பான சூழல் நிலவி வருகிறது.