சேலம், ஜூலை 26- சுற்றுசூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் ஆலையை நடத்த வலியுறுத்திமேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆலை முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலை நிர்வா கம் தொடர்ந்து தொழிற்சங்க உரிமையை மறுப்பதை கண்டித்தும், சுற்றுசூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் ஆலையை நடத்த வலியுறுத்தியும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆலையின் இரண்டாவது நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்திற்கு சிஐ டியு மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.கே.தியாகராஜன் தர்ணாவை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்லம், மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், நிர்வாகிகள் சி.கருப்பண்ணன், ஆர்.வைரமணி, வி.ராம மூர்த்தி, எ.கோவிந்தன் மற்றும் இருநூற் றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங் கேற்றனர். முடிவில், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்,சிங்காரவேலு தர் ணாவை நிறைவு செய்து உரையாற்றினார்.