தருமபுரி, நவ. 30- தருமபுரியில் இளம்பெண்ணுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த ஊர்க்காவல் படை வீரரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அளேபுரத்தை சேர்ந்த மாதையன் மகன் ராஜ்குமார் (30). இவர் பென்னா கரம் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் பணி நிமித்தமாக தருமபுரி பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார், தன்னை காதலிக்கும்படி மிரட்டியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், ராஜ் குமார் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், ராஜ்குமாரை பிடித்து தரும புரி காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல்துறை யினர் வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தருமபுரி கிளைச் சிறையில் அடைக் கப்பட்டார்.