tamilnadu

img

மோட்டார் தொழில் கட்டணங்களை உயர்த்தி படுகுழியில் தள்ளுவதா? திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 27 – வாகனப் பதிவு, இன்சூரன்ஸ், அபராதம் என பல்வேறு கட்டணங் களைத் தாறுமாறாக உயர்த்தி மோட்டார் தொழிலைப் படுகுழி யில் தள்ள முயலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழில் சார்ந்த அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து வகைப் பணிகளுக்கும் உயர்த்தி யுள்ள கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான அரசுப் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொபைல்ஸ் லேபர் யூனியன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம், திருப்பூர் ஆட்டோ ஓட்டுநர் பொது நலச் சங்கம், இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் நலச் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு களைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். சிஐடியு மோட்டார் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வ நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், ஒய்.அன்பு, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் டி.வி.சுகுமார், மாவட்டச் செயலா ளர் ஆர்.சிவராமன், இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் சங்க மாநிலத் துணைத் தலைவர் குழந் தைவேலு, மாநிலத் துணைச் செய லாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் எ.கே.செந்தில்குமார், ஆட்டோ ஓட்டுநர் பொதுநலச் சங்க தலைவர் எஸ்.கிருஷ்ணன், செயலாளர் எச்.யூனிஸ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா இந்தியாவின் மோட்டார்  தொழிலை கார்ப்பரேட் மய மாக்கி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரை அழிக்கக்கூடிய நிலை இருப்பதை ஆர்ப்பாட்டத் தில் பேசியோர் சுட்டிக்காட்டி, இந்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று கூறினர்.