திருப்பூர், ஆக. 26 – திருப்பூர் மாநகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனை அழைக்கா தது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப் பியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் எம்.ரவி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து அளித்த புகார் மனுவில், கடந்த 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், ஆட்சியர், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆனால் இக்கூட்டம் நடைபெறுவது குறித்து எம்.பி. கே.சுப் பராயனுக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. ஏற்கெனவே இதுபோன்று தகவல் தராமல் கூட்டங்கள் நடத்துவது பற்றி சுட்டிக்காட்டி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கடிதம் கொடுத்தபோது இனி மேல் முறைப்படி எம்.பி.க்கு தகவல் தரப்படும் என உறுதிய ளித்தீர்கள். ஆனால் மத்திய அரசின் திட்டம், மத்திய அர சின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிறைவேற்றப் படுகிறது. இப்பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி. கலந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளார். எம்.பி.யை அழைக்காதது குறித்து ஆட்சியர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் எம்.ரவி கேட்டுக் கொண்டிருக்கிறார்.